நேரில் ஆஜராகி இழப்பீட்டுத்தொகை பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று இவ்வறிவிப்பின் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.   

Continues below advertisement

உரிமையாளர்கள், பட்டாதாரர்களுக்கு உரிய இழப்பீட்டுத்தொகையும் வழங்கப்பட்டுள்ளன.

சிவகங்கை மாவட்டம் மற்றும் வட்டம், காஞ்சிரங்கால், சூரக்குளம், பையூர் பிள்ளைவயல், ஆலங்குளம் மற்றும் கீழக்கண்டனி ஆகிய வருவாய் கிராமங்களில் தமிழக மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் சிவகங்கை சுற்றுச்சாலை அமைக்கும் பணிக்காக தனியார் நிலங்களை கையகப்படுத்தியும், கையப்படுத்தப்பட்டுள்ள நிலங்களின் உரிமையாளர்கள், பட்டாதாரர்களுக்கு உரிய இழப்பீட்டுத்தொகையும் வழங்கப்பட்டுள்ளன.

Continues below advertisement

தமிழக அரசு உத்தரவு

இந்நேர்வில் இதுநாள் வரையிலும் இழப்பீட்டுத்தொகை பெற இயலாத, வழங்கிட இயலாத இனங்களுக் குண்டான கொடுபடா தொகையினை உரிய விசாரணை மற்றும் ஆவணங்களை பரிசீலனை செய்து இழப்பீட்டுத் தொகையை உரிய நில உரிமையாளர்களுக்கு விரைந்து வழங்கிட தமிழக அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது.

தேதிகள் என்ன?

அரசு உத்தரவின் அடிப்படையில் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்களுக்கான இழப்பீட்டுத்தொகை கிடைக்கப்பெறாத நில உரிமையாளர், பட்டாதாரர்கள் உரிய ஆவணங்களுடன் எதிர்வரும் 24.02.2026 அன்று காஞ்சிரங்கால் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும், 25.02.2026 அன்று பையூர் பிள்ளைவயல் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும், 26.02.2026 அன்று ஆலங்குளம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும், 27.02.2026 அன்று கீழக்கண்டனி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும் நேரில் ஆஜராகி இழப்பீட்டுத்தொகை பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று இவ்வறிவிப்பின் மூலம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. ​