நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க., சார்பாக சென்னை தலைமை கழகத்தில் வேட்புமனு வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னை செல்வதற்காக  முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரை ரயில் நிலையம் வருகை தந்து, தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மாவை கண்ட இந்த மக்கள் இயக்கத்தை எடப்பாடியார் வெற்றிப்பாதையில் அழைத்துச்  சென்றுள்ளார். இன்றைக்கு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட இரண்டு கோடி தொண்டர்கள் விருப்பமனுவை பெற்றுக் கொண்டு வருகிறார்கள். 40 தொகுதிகளில் தனித் தொகுதியைத் தவிர, அனைத்து தொகுதிகளிலும் எடப்பாடியார் போட்டியிட வேண்டும் என்று கழக அம்மா பேரவை தொண்டர்கள் விரும்புகிறார்கள். அதனை தொடர்ந்து எடப்பாடியார் பெயரில் சென்னை தலைமை கழகத்தில் கழக அம்மா பேரவை சார்பில் எடப்பாடியார் போட்டியிட விருப்பமனுவை கழக அம்மா பேரவையின் சார்பில் நாளைக்கு தாக்கல் செய்ய நிர்வாகிகள் சென்னைக்கு செல்கிறோம். பாரத பிரதமர் பல்லடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் புரட்சித்தலைவரையும், புரட்சித்தலைவி அம்மாவையும் புகழ்ந்து பேசி உள்ளார். இந்த இயக்கத்தை 17.10.1972 ஆம் ஆண்டு  புரட்சித்தலைவர் தோற்றுவித்தார். இதனை தொடர்ந்து 32 ஆண்டுகள் தமிழகத்தில் ஆட்சியில் இருந்து மக்களுக்கு பல்வேறு சாதனை திட்டங்களை தந்தது.



குறிப்பாக கறவை மாடுகள் ஆடுகள் திட்டம், மக்களின் வாழ்வாதார திட்டத்திற்காக தொலைநோக்கு  திட்டங்கள், பசிபட்டினி இல்லாத வண்ணம் 20 கிலோ அரிசி திட்டங்கள் இதுபோன்ற திட்டங்கள் மூலம் அனைவரும் பாராட்டை அம்மா அரசு பெற்றது. அதிமுக ஆட்சியை யாரும் குறை கூற முடியாது அதற்கு தான் பாரத பிரதமர் சான்று அளித்துள்ளார். அந்த சான்று இன்றைக்கு புரட்சித்தலைவர், அம்மாவின் மறுவடிவமாக உள்ள எடப்பாடியாரை சாரும். அதுமட்டுமல்ல 17 மருத்துவக் கல்லூரிகள், 2000 அம்மா மினி கிளினிக், 69 சகவீத இட ஒதுக்கீடு, அரசு பள்ளி மாணவருக்கு மருத்துவ படிப்பிற்கு 7.5 இட ஒதுக்கீடு இது போன்ற திட்டங்களை யாரும் மறக்க முடியாது. இன்றைக்கு இரண்டு கோடி தொண்டர்கள், 8 கோடி தமிழக மக்களின் நன்மதிப்பை எடப்பாடியார் பெற்றுள்ளார். தமிழகம் முழுவதும் 68,520 வாக்கு சாவடிகளில் அதிமுகவின் வலுவான கட்டமைப்பு உள்ளது சாமானிய மக்களின் இயக்கமாக இந்த இயக்கம் உள்ளது.





கூட்டணி குறித்து எடப்பாடியார் அதிமுக நிலைப்பாட்டை மன உறுதியுடன் பலமுறை எடுத்துச் சொல்லி விட்டார். மதுரையில் நடைபெற்ற எஸ்டிபி மாநாட்டில் கூட கூறியுள்ளார் அதிமுக நிலைப்பாடு இதுதான். ஆனால் பிஜேபி நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை என்பது அவர்கள் கட்சியை பொறுத்து அந்த வரும் விபரம் எங்களுக்கு தெரியாது. இந்த பொது தேர்தலில் அதிமுக முடிவை தெள்ளத் தெளிவாக எடப்பாடியார் கூறிவிட்டார். இன்றைக்கு மூன்றாம் பெரிய கட்சியாக அதிமுக உள்ளது. மக்களை காக்கும் பணியில் எடப்பாடியார் மனம் உறுதியுடன் உள்ளார். மத்திய அரசு, மாநில அரசை எதிர்த்து நின்று 100% வெற்றி பெறுவார் இதுதான் அதிமுக நிலைப்பாடு இதில் நாங்கள் உறுதியாக பயணம் செய்வோம். இன்றைக்கு அனைவரும் விருப்பமான தாக்கல் செய்து வருகிறார்கள், தகுதி உள்ள நபர்களை தேர்வு செய்து தலைமை கழகம் அறிவிக்கும் அவர்களை வெற்றி பெறச் செய்ய நாங்கள் பாடுபடுவோம். நாடாளுமன்றத்தில் முல்லை பெரியார், காவிரி குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் பேசவில்லை தமிழகத்தின் உரிமையை காக்க 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுக்கவில்லை .வரும் காலத்தில் அவர்களுக்கு சரியான தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள் அதிமுக மாபெரும் வெற்றி பெறும்” என கூறினார்.