பொங்கல் பண்டிகை


தென்னிந்தியாவில் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகைகளில் பொங்கல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அதிலும், குறிப்பாக தென்னிந்தியாவில், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளாவில் இந்த விழா முக்கியமாக கொண்டாடப்படுகிறது. தை மாதத்தின் முதல் வாரத்தில் ஆண்டுதோறும் வரும் ’பொங்கல்’ என்று அழைக்கப்படும் இந்த திருவிழா உழவர்களின் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் ஒரு பெருவிழாவாக பார்க்கப்படுகிறது. மகாராஷ்டிரத்தில் மகர சங்கராந்தியைப் போலவே இந்த பண்டிகையும் சூரியன் வழிப்படும் நாளாகும்.


- அரசுப் பள்ளிக்கு ஒன்றரை ஏக்கர் நிலத்தை வழங்கிய பெண்! - சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்த மதுரை எம்.பி




பொங்கல் பண்டிகை 4 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 14-ஆம் தேதி தொடங்கி ஜனவரி 17-ஆம் தேதி நிறைவடைகிறது. போகிப் பொங்கல், தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல் மற்றும் காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. போகி பண்டிகை ஜனவரி 14, தை பொங்கல் ஜனவரி 15, மாட்டுப் பொங்கல் ஜனவரி 16 மற்றும் காணும் பொங்கல் ஜனவரி 17 அன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மல்லிகை 3 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 3 ஆயிரம் விலை இருந்தாலும் பனி காலத்தில் விளைச்சல் குறைவால் மல்லிகைப் பூ டிமாண்டாக உள்ளது.










 

மதுரை மல்லிகைப் பூ விலை உயர்வு

 

மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகைப்பூ கிலோ 3000 ரூபாய்க்கும், பிச்சிப்பூ மற்றும் முல்லை ஆகிய பூக்களும் கிலோ 2000 ரூபாய்க்கும், மெட்ராஸ் மல்லி - 2ஆயிரம், சம்மங்கி , செவ்வந்தி -250,  செண்டுமல்லி -100, அரளி -450, பன்னீர் ரோஸ் -300, பட்டன் ரோஸ் - 250க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மல்லிகைப்பூ ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று கிலோ 3 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. முல்லை மற்றும் பிச்சி பூ ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 2 ஆயிரமாக உயர்ந்துள்ளது.


 







இதேபோல், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மலர் சந்தையில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதன்படி மல்லிகை 3 ஆயிரம் ரூபாய்க்கும், முல்லை 2 ஆயிரம் ரூபாய்க்கும், பிச்சி மற்றும் மெட்ராஸ் மல்லி 1500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.,

 

கடந்த வாரம் வரை சுமார் 1500 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட மல்லிகை விலை இருமடங்கு உயர்ந்து 3000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் கடந்த வாரம் வரை 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பிச்சி, முல்லை, மெட்ராஸ் மல்லி உள்ளிட்ட பூக்களின் விலை இன்று மூன்று மடங்கு உயர்ந்து 1500 முதல் 2000 வரை விற்பனை செய்யப்படுகிறது.,

 

பனிப்பொழிவு காரணமாக பூக்களின் வரத்து குறைந்துள்ள சூழலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டும் பூக்களின் விலை இன்று கடுமையாக உயர்ந்துள்ளது. மேலும் நாளை மறுநாள் பொங்கல் பண்டிகை கொண்டாட உள்ள சூழலில் நாளை பூக்களின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.,