மதுரையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவிருந்த பொங்கல் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.


மதுரையில் ஜனவரி 12ஆஅம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக சார்பில் பொங்கல் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், மதுரையில் பிரதமர் பங்கேற்கவிருந்த பொங்கல் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுவதாகவும், கொரோனா, ஒமிக்ரான் அதிகரிப்பு காரணமாக நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அண்ணாமலை கூறினார். புதுச்சேரியில் பிரதமர் மோடி பங்கேற்கவிருந்த விழா ரத்து செய்யப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.