Megamalai : சீதோஷ்ண நிலையால் மேகமலை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தேனி மாவட்டத்தில் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலமான மேகமலையில் சீதோஷ்ண நிலையால், அம்மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

Continues below advertisement

உயரமான மலைச்சிகரங்களுக்கு நடுவில் உள்ள பெரும் பள்ளத்தாக்குப் பகுதியே மேகமலை. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது இந்தப் பள்ளத்தாக்குப் பகுதி. ஆங்கிலேயர்கள் தேயிலைத் தோட்டங்கள் அமைக்க மேகமலையைத் தேர்ந்தெடுத்தனர். மேகமலை பகுதிகளில் முழுவதும் காப்பி, தேயிலை போன்றவைகள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. மேகமலை கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டர் உயரத்தில் உள்ளதால், கண்களை கவரும் தேயிலைத் தோட்டங்களும், இங்கு எப்போதும் குளுமையான சூழலும் இருக்கும்.

Continues below advertisement

 


தேனி மாவட்டம் சின்னமனூரில் இருந்து 45 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மேகமலை என்னும் அழகிய மலைக்கிராமம். மேற்கு தொடர்ச்சி மலைகளில் ஒரு அழகிய நில அமைப்பை கொண்ட இடம். மேகமலைக்கு செல்லும் வழியில் சாலையோரங்களில் திராட்சை தோட்டங்களும், தென்னை மரங்களும், காற்றாலைகளும் நிறைந்த கிராமச் சாலைகளில் செல்லும் போதே, மேகங்கள் நம்மை வரவேற்கும்.

சின்னமனூர் அருகே தென்பழனி என்ற இடத்தில் இருந்து மலைவழிச்சாலை துவங்கும். மேகமலை ஒரு பாதுகாகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால் செல்லும் வழியில் உள்ள வனத்துறை சோதனை சாவடியில்  நமது விபரங்களை பதிவு செய்துவிட்டு செல்ல அறிவுறுத்தியுள்ளது வனத்துறை. மேகமலை செல்வோர்கள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே மலைப் பாதையில் வாகன ஓட்டிகள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

 


தேனி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் முதலில் தேர்ந்தெடுப்பது மேகமலை தான். சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் மேகமலையில் தற்போது அதிக அளவு பனிமூட்டம் இருப்பதால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது. தற்போது தேனி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், சின்னமனுார் அருகே உள்ள ஹைவேவிஸ், மேகமலை, வெண்ணியாறு, மணலாறு, அப்பர் மணலாறு மற்றும் இரவங்கலாறு மலைக்கிராமங்களில் சில மாதங்களாகவே உறைபனி மற்றும் கடும் குளிர் நிலவுகிறது.

மேகமலையில் கடும் குளிரும், மழையும் பெய்து வருவதாலும், அட்டை பூச்சிகளுக்கு மத்தியிலும், எந்த நேரமும் யானைகள் ஊருக்குள் வந்து விடும் என்ற அச்சத்திலும் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் சிரமத்தில் உள்ளனர். மேலும் மேக மலைப்பகுதியில் அவ்வப்போது வெயிலும் குளிர்ச்சியான காற்றும் நிலவி வருவதால், வானிலை மாற்றத்தை சமாளிக்க முடியாமல் தவிக்கின்றனர் மேகமலை மக்கள். இரவு வேளைகளில் கடுமையான உறைபனி நிலவுவதால் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர் அப்பகுதி மக்கள். கடும் பனிமூட்டம் இருப்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக குறைந்ததாக மேகமலை பகுதி மக்கள் கூறினர். பனிமூட்டம் சீரான பிறகு சுற்றுலா பயணிகள் மீண்டும் மேகமடை பகுதிக்கு வருவதற்கு வாய்ப்பு உள்ளது எனவும் கூறினர் .

Continues below advertisement
Sponsored Links by Taboola