உலகப் பிரசித்திபெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் மற்றும் கள்ளழகர் திருக்கோயிலின் சித்திரை திருவிழா வரும் 5ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதி வரை தொடர்ந்து 15 நாட்கள் திருவிழாவாக நடைபெறவுள்ளது. இதில் முக்கிய நிகழ்வாக வரும் ஏப்-14ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், 15ஆம் தேதி தேரோட்டமும், 16ஆம் தேதி கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளுவது போன்று முக்கிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ள வாய்ப்புள்ளது. இந்நிலையில்  திருக்கல்யாண உற்சவத்தினை காண வரும் பக்தர்கள் வரும் 4ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை ஆன்லைன் மற்றும் நேரடியாக முன்பதிவிற்காக விண்ணப்பிக்கலாம் என கோவில் நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.




அதன்படி திருக்கல்யாண உற்சவத்தினை தரிசிக்க 500ரூபாய் கட்டணச்சீட்டு 2500 பக்தர்களுக்கும்,  200 ரூபாய் கட்டணச் சீட்டு 3200பக்தர்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும், பக்தர்கள் WWW.maduraimeenakshi.Org என்ற இணையதள மூலமாகவும், மீனாட்சியம்மன் கோவில் மேற்கு சித்திரை வீதி பிர்லா விஷ்ரம் தங்கு விடுதியில் அலுவலகத்திலும் நேரடியாகவும் முன்பதிவு செய்துகொள்ளலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர். கட்டண தரிசனத்திற்கு முன்பதிவு செய்யக்கூடிய பக்தர்கள் ஆதார்கார்டு, பான் கார்டு, வாக்காளர் அட்டை, லைசென்ஸ், ரேசன்கார்டு, பாஸ்போர்ட், வங்கி பாஸ்புக் உள்ளிட்ட ஏதேனும் ஒரு ஆவண நகல் மட்டும் செல்போன் எண், மெயில் ஐடிகளை சமர்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




அனுமதிக்கப்பட்ட 5ஆயிரத்தை 700 விண்ணப்பங்களை கடந்து விட அதிகளவிற்கு முன்பதிவு செய்தால் கணினி முறை குலுக்கல் நடத்தி பின்னர் கட்டணம் வசூலிக்கப்பட்டு அனுமதி சீட்டு வழங்கப்படும் எனவும், இதேபோன்று திருக்கல்யாண உற்சவத்தன்று இலவச தரிசனம் செய்யக்கூடிய பக்தர்கள் கோயிலின் தெற்குகோபுர நுழைவாயில் வழியாக முதலில் வருகை தரக்கூடியவர்கள் அனுமதிக்கப்பட்டு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும், முன்பதிவிற்கான நேரடி விண்ணப்ப படிவங்களை இணையதளத்தில் டவுண்லோட் செய்துகொள்ளலாம் எனவும்,  500ரூபாய் கட்டண தரிசனத்திற்கு ஒரு நபர் இரு அனுமதி சீட்டும், 200ரூபாய் கட்டணத்திற்கு ஒரு நபருக்கு 3அனுமதி சீட்டுகள் மட்டுமே வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 4ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை ஆன்லைனில் பதிவு செய்து தேர்வு செய்யப்பட்ட பக்தர்களுக்கு வரும் 13ஆம் தேதி கட்டண அனுமதி சீட்டுகள் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.




கொரோனா பரவல் காரணமாக இரு ஆண்டுகளாக பக்தர்கள் அனுமதியின்றி சித்திரை திருவிழா நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளுடன் கட்டண அனுமதி சீட்டு முறையில் அனுமதிக்கப்படவுள்ளனர்.


இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Madurai Chithirai Festival : சித்திரை திருவிழா முகூர்த்தக்கால் நடும் விழா நிகழ்வுடன், கோலாகலமாக தொடக்கம்..