வண்டியூர் கண்மாய் அழகுப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் பணிகள்” ஆணையாளர் சித்ரா விஜயன்,  ஆய்வு.

Continues below advertisement

மதுரை வண்டியூர் பூங்கா

மதுரை மாநகராட்சி வண்டியூர் கண்மாயினை அழகுப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் இறுதி கட்டப் பணிகள் குறித்து ஆணையாளர் திருமதி.சித்ரா விஜயன், அவர்கள் இன்று (13.02.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Continues below advertisement

வசதிகள் என்ன

மதுரை மாநகராட்சி வண்டியூர் கண்மாயினை அழகுப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் பணிக்காக அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு நிதியின் கீழ் ரூ.50 கோடி மதிப்பீட்டில் கண்மாயின் படுகையை பலப்படுத்தவும், கண்மாயில் படகுசவாரி வசதிகள் ஏற்படுத்துதல், கண்மாயின் மேற்குப்புறம் மற்றும் வடபுறத்தில் இருசக்கர மிதிவண்டி பாதை அமைத்தல், நடைபயிற்சி பாதை அமைத்தல், யோகா மையம், தியான மையம், சிற்றுண்டி, சிறிய நூலகம், குழந்தைகள் மற்றும் முதியோர் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய விளையாட்டு உபகரணங்கள், செயற்கை நீருற்று, ஆம்பி தியேட்டர், ஸ்கேட்டிங் தளம், கராத்தே பயிற்சி மையம், இறகு பந்து மைதானம், வாகன நிறுத்துமிடம், நவீன கழிப்பிடம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பூங்காக்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நேரில் பார்வையிட்டார்

வண்டியூர் கண்மாயில் நடைபெற்று வரும் இறுதி கட்டப் பணிகளை ஆணையாளர் அவர்கள் நேரில் பார்வையிட்டு விரைந்து பணிகளை மேற்கொண்டு முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது உதவி செயற்பொறியாளர் திரு.ஆரோக்கிய சேவியர், உதவிப்பொறியாளர் திரு.அமர்தீப் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.