உசிலம்பட்டி பகுதியில் சூரைக்காற்றுடன் பெய்த மழை காரணமாக பெரும்பாலான பகுதிகளில் மரக்கிளைகள் முறிந்து மின்வயர்களில் விழுந்தால் மின் தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதியுற்றனர்.
பரவலான மழை பெய்து வருகிறது
வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலான மழை பெய்து வருகிறது., இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர் பகுதிகள் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தொட்டப்பநாயக்கணூர், உத்தப்பநாயக்கணூர், தி.விலக்கு, செல்லம்பட்டி, அல்லிகுண்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சூரைக்காற்றுடன் பரவலான மழை பெய்தது.,காலை முதலே வெயில் வாட்டி வதைத்ததால் மாலை நேரத்தில் பெய்த இந்த மழை காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவினாலும்., சூரை காற்றுடன் பெய்த இந்த மழை காரணமாக பெரும்பாலான பகுதிகளில் மரக்கிளைகள் முறிந்து மின் வயர்களில் விழுந்ததால் மின் தடை ஏற்பட்டது. பல்வேறு பகுதிகள் இருளில் மூழ்கியதால் பொதுமக்களும், பொதுத் தேர்வு எழுதும் மாணவ மாணவிகளும் கடும் அவதிக்குள்ளாகினர். மின்வாரிய அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் போர்க்கால அடிப்படையில் விரைந்து சென்று மின் தடையை சீர் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
