Just In

ரஷ்யாவை கதறவிடும் உக்ரைன்; மீண்டும் மிகப்பெரிய தாக்குதல், முக்கிய பாலம் தகர்ப்பு - வீடியோ

தென் மாவட்ட மக்களே.! ரயில் போக்குவரத்தில் மாற்றம் - விவரத்த தெரிஞ்சுக்கிட்டு பிளான் பண்ணுங்க

மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சுங்க கட்டணம் வசூல் செய்ய இடைக்கால தடை !

ஆடு, கோழி திருட வந்ததாக கூறப்படும் இரு இளைஞர்கள் அடித்துக் கொலை, சிவகங்கையில் பரபரப்பு !

வார இறுதியில் முகூர்த்த நாள்கள்.. வெளியூர் போறீங்களா? இந்த வீக் கவலையே இல்ல
"இன்னிங்ஸ் வெற்றி" டெஸ்ட் போட்டியுடன் போரை ஒப்பிட்ட முப்படை தலைமை தளபதி
Madurai: கை நிறைய சம்பாரிக்க காளான் வளர்ப்பு.. மதுரை மாணவிகள் அசத்தல் !
மதுரை பாத்திமா கல்லூரி சார்பாக கல்லூரி மாணவிகள் மற்றும் கிராமபுற பெண்களுக்கு காளான் வளர்ப்பு குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.
Continues below advertisement

காளான்
’மொட்டுக் காளான், சிப்பிக் காளான், நாட்டுக் காளான், பால் காளான், அரிசிக் காளான் என இந்தியாவில் மட்டும் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட வகைகள் உள்ளன. உலகம் முழுதும் மொத்தம் 20 ஆயிரத்திற்கும் அதிகமான காளான் வகைகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இப்படியான காளான் வகையில் குறிப்பிட்ட வகைகள் உணவாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. காளானில் வைட்டமின் பி அதிகமாக இருப்பதாகவும், இதய நோய்க்கு கூட மருந்தாக பயன்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். போலிக் அமிலம் அதிகளவு இருப்பதால் ரத்த சோகைக்கும் நல்லது. கண்பார்வை, எலும்பு வலுபெறுதல், பற்கள் உருதி தன்மைக்கு தேவையான தாமிரம், இரும்பு, சத்துகளுடன் கூடிய கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற தாதுக்களும் காளானில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் காளான் உற்பத்தி தற்போதைய காலகட்டத்திற்கு அவசியமான ஒன்றாக மாறியுள்ளது.

இந்நிலையில் மதுரை பாத்திமா மகளிர் கல்லூரி சார்பாக காளான் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டுள்ளது. இதில் கல்லூரி மாணவிகள் மற்றும் கிராமபுற பெண்களும் கலந்துகொண்டு பயிற்சி மேற்கொண்டுள்ளனர். இது குறித்து வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் பரமேஸ்வரி நம்மிடம்....," 'Fatima incubation entrepreneurial skill training and animation of fatima college' - சார்பாக இரண்டு நாள் காளான் வளர்ச்சி வகுப்பு நடத்தப்பட்டது. இதில் எங்கள் கல்லூரி மாணவிகள் மற்றும் மேலும் சில கல்லூரி மாணவிகளும் கிராமபுற பெண்களும் பயிற்சி எடுத்துக் கொண்டனர்.
காளான் வளர்ப்பிற்கு தேவையான சூழல், காளான் வளர்ப்பு முறை, காளான் பாதுகாப்பு, அறுவடை, சந்தைப்படுத்துதல் உள்ளிட்டவை பற்றி முழு காளான் பராமரிப்பு குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. இதில் பாத்திமா கல்லூரி விலங்கியல் துறை சார்ந்த உதவி பேராசிரியர் தெல்மா, இந்த காளான் வளர்ப்பு பயிற்சியினை அளித்தார் மற்றும் முனைவர். கலைச்செல்வி வணிகவியல் துறை உதவி பேராசிரியர் இந்த பயிற்சி வகுப்பினை ஒருங்கிணைத்தார்" என தெரிவித்தார்.
இது குறித்து பயிற்சி மேற்கொண்ட கிராம பெண்கள்..,” விவசாயம், விவசாயம் சேர்ந்த உபதொழில்களை எளிமையாக மேற்கொள்ள முடியும். ஏனெனில் வீட்டில் இருந்து கொண்டே இவற்றை செய்ய முடியும். அதே சமயம் நம் வீட்டையும் முறையாக கவனித்துக் கொள்ள முடியும். காளான் பயிற்சி வகுப்பு மிகவும் பயனாக இருந்தது. இங்கு கற்றுக் கொண்ட பயிற்சியின் அடிப்படையில் சிறிய அளவில் காளான் வளார்ப்பு ஆரம்பிக்க உள்ளோம். தொடர்ந்து அதில் கிடைக்கும் நிறை, குறைகளை எடுத்துக் கொண்டு காளான் உற்பத்தியை விரிவுபடுத்துவோம்.” என்றனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Madurai: அரசியல் கட்சியா? ஐஏஎஸ் பதவியில் இருந்து விலகியது இதற்காகத்தான்.. மனம் திறந்த சகாயம்!
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.