த.வெ.கவில் இணையவுள்ளீர்களா? என்ற கேள்விக்கு இரட்டை விரலை காண்பித்தபடி சத்தமே இல்லாமல் பதில் சொன்ன முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

Continues below advertisement

செல்லூர் ராஜூ செய்தியாளர் சந்திப்பு

மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க., அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் மதுரை மாநகராட்சி எதிர்கட்சி குழு தலைவர் சோலைராஜா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

Continues below advertisement

சோலைராஜா பேசியபோது : இரு தினங்களுக்கு முன்பாக விளையாட்டு வீரர்கள் அமைப்பு சார்பில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குறித்து அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை பேசியதற்கு கண்டனம் தெரிவித்து பதில் அளித்து இருந்தேன். இதனை தற்போது நாளிதழ்களில் செய்திகள் தான் தாவேகாவில் சேர உள்ளதாகவும், ஆதவ் அர்ஜுனாவிற்கு ஆதரவாக பேசியதாகும் செய்திகள் வெளியாகி உள்ள நிலையில் மாவட்ட செயலாளர் உரிய விளக்கம் அளித்துள்ளேன். மேலும் இன்பத்துறை ஆதவ் அர்ஜுன குறித்து பேசியது தவறுதான். விளையாட்டுத்துறையில் உள்ளவர்கள் அமைச்சராக நீடிக்கலாம். ஏற்கனவே அமைச்சராக இருந்தவர்களும் விளையாட்டு துறையில் இருந்திருக்கிறார்கள். எனவே இன்பதுரையின் கருத்து தவறான கருத்துதான். இருந்தபோதிலும் இன்ப துறையை கண்டிப்பதாக கூறிய வாசகங்களை திரும்ப பெறுவதாக தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர்...,"சோலை ராஜாவின் விளக்கம் குறித்து பதிலளிப்பதற்காக மட்டும்தான் இந்த செய்தியாளர் சந்திப்பு என கூறினார்.

மேலும் நீங்களும் தவெகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகிறது என்று கேள்விக்கு 

தனது கைவிரல்களால் இரட்டை இலை சின்னம் காட்டியபடி எந்தவித பதிலும் அளிக்காமல் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு புறப்பட்டு சென்றார். முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தவெகவில் இணையவுள்ளதாக  வந்த தகவல் உண்மையில்லை எனவும், தான் அதிமுகவிலேயே இருப்பதாக பதில் அளிக்கும் வகையில் விரல் அசைவில் தெரிவித்து புறப்பட்ட சென்றார் செல்லூர் ராஜூ.