மதுரை மாவட்டம் சத்திரபட்டி அருகே கருவனூர் கிராமத்தில் முன்னாள் அ.தி.மு.க., சட்டமன்ற உறுப்பினர் பொன்னம்பலம் அவரது குடும்பத்தினருடன் வசித்துவருகிறார்.  இவர் கடந்த 2001 - 2006 ஆம் ஆண்டு சமயநல்லூர் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராக பதவி வகித்தார்.


 






இந்நிலையில் பொன்னம்பலத்தின் சொந்த ஊரான கருவனூரில் உள்ள பாறை கருப்பசாமி கோயிலின் உற்சவ விழா கடந்த ஒரு வாரமாக நடைபெற்று கடந்த சனிக்கிழமை முடிவடைந்தது. 




இந்நிலையில் கோவிலில் மரியாதை அளிப்பதில் கருவனூர் திமுக கிளை செயலாளர் வேல்முருகன் தரப்பினருக்கும், முன்னாள் எம்.எல்.ஏ பொன்னம்பலம் தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த வழக்கில் முன்னாள் எம்எல்ஏ பொன்னம்பலம் மற்றும் அவரது மகன்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


 






இந்நிலையில் கருவனூரில் உள்ள பொன்னம்பலத்திற்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள வீட்டில் கதவை உடைத்து அங்கிருந்த 5 லட்சம் ரூபாய் பணம், மற்றும் பல்வேறு ஆவணங்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.


 




இது குறித்து பொன்னம்பலம் மனைவி பழனியம்மாள் சத்திரபட்டி காவல்நிலையத்தில் அளித்த புகாரின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொன்னம்பலம் வீட்டில் இல்லாதத தெரிந்து கதவு உடைக்கப்பட்டு திருடு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.