மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை மறுநாள் ( செப்டம்பர் 22, 2025, திங்கள்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.

மாதாந்திர பராமரிப்புப் பணிகள்
 
தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் பல இடங்களில் நாளை காலை 09 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 
ஆரப்பாளையம் துணை மின்நிலையம் மின்தடை ஏற்படும் இடங்கள்
 
சுடுதண்ணீர் வாய்க்கால் ரோடு, ராஜா மில் ரோடு, ஓர்க்ஷாப் ரோடு, பேச்சியம்மன் படித்துறை, கிருஷ்ணராயர் தெப்பக்குளம், ஆதிமூலம் பிள்ளை அங்கையற்கண்ணி வளாகம், அழகரடி மற்றும் 4வது தெரு, மற்றும் விவேகானந்தர் ரோடு, ஆரப்பாளையம் கிராஸ் ரோடு, ஆரப்பாளையம் மெயின்ரோடு, புட்டு தோப்பு மெயின் ரோடு, HMS காலணி, மேலப் பொன்னகரம் மெயின் ரோடு, புது ஜெயில் ரோடு, கரிமேடு ஏரியா முழுவதும், மோதிலால் மெயின் ரோடு, ராஜேந்திர மெயின் ரோடு 1வது தெரு 2வது தெரு, பாரதியார் ரோடு முழுவதும், பொன்னகரம் பிராட்வே, தாகூர் நகர், பாலம் ஸ்டேசன் ரோடு, குலமங்கலம் மெயின் தாகூர் நகர், அய்யனார் கோவில் தெரு, செல்லூர் 60 அடி மெயின் ரோடு, கனகவேல் காலனி, மணி நகர் மெயின் 1வது 2வது தெரு, வெங்கடசாமி நாயுடு அக்ரஹாரம், தமிழ்ச்சங்கம் ரோடு, அக்ரஹாரம் மற்றும் திலகர் திடல் சந்தை, பாரதியார்ரோடு.
 
மீனாட்சியம்மன் கோயில் துணைமின்நிலையம் மின்தடை ஏற்படும் இடங்கள்
 
மேல சித்திரை வீதி, வடக்கு சித்திரை வீதி, தெற்கு சித்திரை வீதி, கீழப்பட்டமார் தெரு, மேல பட்டமார் தெரு, வடக்காவணி மூலவீதி, மேற்கு சித்திரை வீதி,மேல ஆவணிமூல வீதி, வெள்ளியம்பளம் தெரு, மேலச்செட்டி, கீழச்செட்டி, மறவர்ச்சாவடி, ஜடாமுனி கோவில் தெரு, தெற்கு ஆவணிமூல வீதி ஒரு பகுதி, கீழச்சித்திரை அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி, கிழக்கு ஆவணி மூலவீதி, மேலநாப்பாளையம், தெரு, தாசில்தார் பள்ளிவாசல் தலவாய் தெரு, தொட்டியன் கீழநாப்பாளையம், கீழமாசி கிணற்றுச்சந்து, கீழமாரட் வீதி, மீனாட்சிகோவில் தெரு, அனுமார் கோவில் படித்துறை, வடக்கு மாசி வீதி, வக்கீல் புதுத்தெரு, செல்லத்தம்மன் கோவில் தெரு மற்றும் காமாட்சி அம்மன் கோவில் தெரு, நெல்பேட்டை, காயிதே மில்லத் தெரு, சுங்கம் பள்ளிவாசல், ஆட்டு மந்தைபொட்டல், சோமசுந்தர அக்ரஹாரம், நேதாஜி மெயின்ரோடு ஒரு பகுதி, பேச்சியம்மன் படித்துறை, திருமலை ராயர் படித்துறை, தைக்கால் தெரு, வடக்கு வெளி வீதி. தெற்கு காவல் கூடதெரு, மேல கோபுரம் வீதி.