மதுரையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்படவுள்ளது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Continues below advertisement
மின்தடை அறிவிப்பு  
 
தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் சில இடங்களில் நாளை காலை முதல் மதியம் வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 
மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்:  (காலை 10:00 - மதியம் 1:00 மணி)
 
பொட்டபனையூர், ஆர்.எம். காலனி, விளத்துார், இளமனுார், கோழிக்குடி, சக்கிமங்கலம், சவு ராஷ்டிரா காலனி, புவனேஸ்வரி காலனி, எல். கே.பி. நகர், அம்பேத்கார் நகர், அஞ்சுகம் நகர், ஆண்டார்கொட்டாரம், கருப்பு பிள்ளையனேந் தல், கல்மேடு, அய்யனார் நகர், அய்யணன் நகர், சந்திரலேகா நகர், களஞ்சியம், சமத்துவபுரம், முனியாண்டிபுரம், அணைக்கட்டு.
 
(காலை 9:00 - மதியம் 3:00 மணி)
 
கிண்ணிமங்கலம், மாவிலிப்பட்டி, கருமாத்துார், சாக்கலிபட்டி, கோவிலாங்குளம், பூச்சம்பட்டி, ஜோதிமாணிக்கம், வடபழஞ்சி, தென்பழஞ்சி, பல்கலை நகர்.
 
அலங்காநல்லூர் துணைமின்நிலையம் (காலை 9:00 - மதியம் 2:00 மணி)

அலங்காநல்லூர் பகுதி முழுவதும், நேஷனல் சுகர் மில், பி.மேட்டுப்பட்டி, பண்ணைக்குடி, அழகாபுரி, புதுப்பட்டி, செல்லக்கவுண்டன்பட்டி, சிறுவாலை, அம்பலத்தாடி, பிள்ளையார்நத்தம், குறவன்குளம், மீனாட்சிபுரம், இடையப்பட்டி, அய்யூர், கோவில்பட்டி, வைகாசிப்பட்டி, கீழச்சின்னணம்பட்டி மற்றும் அலங்காநல்லூர் துணைமின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகள்.

Continues below advertisement