மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை ( டிசம்பர் 17, 2025, புதன்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.

Continues below advertisement

மாதாந்திர பராமரிப்புப் பணிகள்
 
தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் பல இடங்களில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 
மின் தடை ஏற்படும் பகுதிகள்
 
ஆவடையாபுரம், மத்தக்கரை, தே.கல்லுப்பட்டி நகரை சுற்றிய பகுதி முழுவதும், ராம்நகர், ராமுணிநகர். பாலாஜிநகர், கெஞ்சம்பட்டி, காரைக்கேணி, வன்னிவேலம்பட்டி, தே. குண்ணத்தூர், கிளாங்குளம், தம்பிபட்டி, கொண்டுரெட்டிபட்டி, ஆண்டிபட்டி, காடனேரி, எம்.சுப்பலாபுரம், வில்லூர், புளியம்பட்டி, வையூர், சென்னம்பட்டி, சின்னரெட்டிபட்டி, பெரியபூலாம்பட்டி, குருவநாயக்கன்பட்டி, கள்ளிக்குடி, குராயூர், M.புளியங்குளம், சென்னம்பட்டி, மையிட்டான்பட்டி, நல்லமநாயக்கன்பட்டி, தென்னமநல்லூர், சித்தூர், ஆவல்சூரம்பட்டி, திருமால், சிவரக்கோட்டை, பாரமவுண்ட் மில் ஏரியா, ராஜாராம் பவுடர் கம்பெனி, அலுமினியம் மெட்டல் பவுடர் கம்பெனி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு 17.12.2025 தினம் காலை 09.00 மணி முதல் மாலை 02;00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்பதை செயற்பொறியாளர் பொறிஞர். P.முத்தரசு தெரிவிக்கின்றார்.
 
மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை

மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.

 பாதுகாப்பாகவும் சுகமாகவும் சமாளிக்க முடியும்.

Continues below advertisement

மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும்.இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாகவும் சுகமாகவும் சமாளிக்க முடியும்.