தவளை போல குதித்து செல்லும் அவலம்


மதுரை பெரியார் பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 55 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு 2021 -ம் திறக்கப்பட்டு, தற்போது பயன்பாட்டில் இருந்து வருகிறது. இங்கே நாள்தோறும் மதுரை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பயணிகள் மாணவ, மாணவிகள், பெண்கள் உள்ளிட்டோரும் ஏராளமான மாற்றுத்திறனாளிகளும் பேருந்துகளுக்காக வருகை தருகின்றனர். இந்நிலையில் பெரியார் பேருந்து நிலையப் பகுதியில் பேருந்துகள் வந்து செல்லக்கூடிய பிளாட்பாரம் பகுதி முழுவதிலும்  தண்ணீர் தேங்கி நிற்பதால் நாள்தோறும் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். தண்ணீர் எப்போதும் தேங்கி இருப்பதால் பேருந்தில் இருந்து இறங்கக்கூடிய பயணிகளும் பேருந்தில் ஏறக்கூடிய பயணிகளும் தவளை போல குதித்து, குதித்து செல்லும் நிலை உள்ளது. தொடர்ச்சியாக நாள்தோறும் தண்ணீர் தேங்கி இருப்பதன் காரணமாக பாசி பிடித்து தண்ணீரில் நடந்து செல்லும் மூதாட்டிகள் குழந்தைகள் பெண்கள் என தண்ணீரில் வழுக்கி  விழுந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர்.


- Madurai: "காட்டுப்பன்றி உலா, மதுப்பிரியர்கள் கேலி" மதுரையில் பள்ளி மாணவிகளுக்கு பிறக்குமா விடிவு காலம்?


ஆய்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை


தண்ணீர் தேங்கியிருப்பதால் பிளாட்பாரங்களில் செல்லாமல் ஓரங்களிலும் கம்பிகளை பிடித்தபடி பாதுகாப்பற்ற முறையில் பெண்கள் நடந்து செல்கின்றனர். இலவச பெண்கள் பேருந்துகள் நிறுத்தும் பகுதியில் தண்ணீர் தேங்கி பாசி பிடித்திருப்பதால் பெண்கள் தினசரி வழுக்கி கிழே விழும் நிலை ஏற்படுகிறது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளும் கண்டு கொள்ளாத நிலையில் நாள்தோறும் பெண் பயணிகளும் மூதாட்டிகளும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலை எப்போது மாறும் என ஒவ்வொரு பயணிகளும் பேருந்து ஏறும் போதும் இறங்கும்போதும் தங்களது வேதனையை வெளிப்படுத்திய படி செல்கின்றனர். பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட பெரியார் பேருந்து நிலையத்தில் மக்களுக்கான வசதிகள் இல்லாமல் கீழே தவறி விழுகும் வகையில் உயிருக்கு ஆபத்தான நிலை காணப்படுகிறது. எனவே மாநகராட்சி பெரியார் பேருந்து நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து உரிய ஆய்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.


மேலும் செய்திகள் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - MR Vijayabaskar: ரூ.100 கோடி நில அபகரிப்பு : போலி ஆவணங்கள், தலைமறைவான எம்.ஆர். விஜயபாஸ்கர் - வடமாநிலம் விரைந்த போலீசார்


இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Suriya Movie Re-Release : விஜயின் வழியே சூர்யா... பிறந்தநாள் ஸ்பெஷலாக ரீ ரிலீஸாகும் மாஸ் படங்களின் லிஸ்ட் இதோ