மதுரை மேலூர் எட்டிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் பா.ஸ்டாலின். இவர் உயர்நீதி மன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாட்டில் கள்ளர், மறவர், அகமுடையோர் இணைந்த முக்குலத்தோர் சமூதாயத்தை தேவர் என்ற பெயரில் அழைப்பது தொடர்பாக கடந்த 11.9.1995ல் தமிழ்நாடு அரசு  வெளியிட்ட அரசாணை இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை. தேவர் சமுதாயம் என அழைக்கப்படாத நிலையில் கள்ளர், அகமுடையோர் மற்றும் சேர்வை பிரிவினர் பிற்படுத்தப்பட்ட பிரிவிலும், பிரமலைக் கள்ளர் மற்றும் மறவர் பிரிவினர் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவிலும் உள்ளனர். ஒரே சமுதாயத்தில் பல பிரிவுகளாக உள்ளனர். எனவே தமிழ்நாடு அரசின் அறிவிப்பாணையை முறையாக அமல்படுத்துமாறு உத்தரவிட வேண்டும் என கடந்த 2011 ஆம் ஆண்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.


7 அடி உயர முள் படுக்கையில் படுத்து பெண் சாமியார் அருள்வாக்கு...குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள்





விசாரணையின்போது மனுதாரர் தரப்பில் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு 30 வருடங்கள் ஆகப்போகிறது இதுவரை இந்த நடைமுறைப்படுத்தவில்லை. இதனால் பல குழப்பங்கள் உள்ளது. எனவே அறிவிப்பாணையை நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும் என வாதிட்டனர். வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்து தீர்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.