அதிமுக ஆட்சியில் தான் மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டம் வரும். அதைத்தான் மதுரை மீனாட்சி சொக்கநாதரும் மதுரை மக்களும் விரும்புகிறார்கள். அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் பேட்டி.


செல்லூ ராஜூ செய்தியாளர் சந்திப்பு

 

மதுரை பழங்காநத்தம் பகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று செய்தியாளர்களை சந்தித்தார்...,” 2026 தேர்தலில் தி.மு.க., வாக்கு வாங்க வேண்டும், மதுரை மக்களின் வாக்கை பெற வேண்டும் என்பதற்காக, மதுரை மக்களை ஏமாற்றுவதற்காக, மெட்ரோ திட்டத்திற்கு போராட்டம் நடத்தி வருகிறது. நான்கு ஆண்டுகளில் எந்தவிதமான திட்டங்களையும் மதுரை மக்களுக்கு திமுக கொண்டு வரவில்லை. மதுரை மக்களுக்கு நல்லதை செய்தது அதிமுக தான். ஈபிஎஸ் எட்டாயிரம் கோடிக்கு மதுரையில் பணிகளை மேற்கொண்டார். முல்லைப் பெரியாறு கூட்டு குடிநீர் திட்டம் 24 மணி நேரமும் மதுரை மக்களுக்கு சுத்தமான தண்ணீர் கிடைக்கும். இந்தத் திட்டத்தை தற்போது வரை திமுக கொண்டு வரவில்லை. ஒரு ஆளுங்கட்சி ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. 2,500 பேர் இருக்கிறார்கள். மூன்று வருவாய் மாவட்டம் சேர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தியதில் 2500 பேர் தான் வந்திருக்கிறார்கள். 

 

இப்படி அனுப்பி இருக்க வேண்டும்

 

திமுக அரசு மெட்ரோ குறித்து எடுத்திருக்கக்கூடிய வாதம் தப்பானது. மெட்ரோ ரயிலை மத்திய அரசு தடுத்து விட்டது என்று திமுகவினர் பரப்புகிறார்கள். இது திமுகவின் நாடகம். மத்திய அரசிலிருந்து அனுப்பப்பட்ட கடிதம் வழக்கமான நடைமுறைதான். Dpr அனுப்பியதில் நிறைய குளறுபடி இருக்கிறது. 2017 சட்டதிட்டத்தின் படி 17 லட்சம் மக்கள் இருக்க வேண்டும். 15 லட்சம் மக்கள் இருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறீர்கள். இது சரியல்ல இதை மீண்டும் அனுப்ப வேண்டும் என மத்திய அரசு சொல்கிறது. திமுக ஆட்சிக்கு வந்து நாலரை வருஷம் ஆகிறது. இத்தனை வருடங்களாக டிபிஆர் திட்டம் தயார் செய்யாமல், தற்போது தான் அனுப்பி இருக்கிறார்கள். திமுக ஏமாற்று வேலை செய்கிறது. தற்போது மதுரை மக்களின் ஜனத்தொகை எவ்வளவு என்பதை குறிப்பிட்டு திமுக அனுப்பி இருக்க வேண்டும். 20 லட்சம் மக்கள் மதுரையில் வாழ்கிறார்கள். ஒத்தக்கடை முதல் திருமங்கலம் வரை உள்ள மக்களை திமுக கணக்கெடுத்து மதுரை மெட்ரோ ரயிலுக்கு டி பி ஆர் அனுப்பியிருக்க வேண்டும். 

 

மாநகராட்சியில் 200 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளார்கள்

 

இந்தத் திட்டம் வரக்கூடாது என்ற நோக்கத்தில் திமுக செய்துள்ளது. மதுரைக்கு ஒரு வளர்ச்சிப் பணி கிடைக்கிறது என்றால் அனைவருக்கும் அது மகிழ்ச்சிதான். ஆக்ராவில் 2016 இல் மெட்ரோ திட்டம் குறித்து dpr திட்டம்  அனுப்பிவிட்டார்கள். மெட்ரோ திட்டம் மதுரைக்கு கிடைக்க வேண்டும் என்று திமுக நினைத்தால் திட்ட அறிக்கையை முறையாக அனுப்பி இருக்க வேண்டும். மதுரையில் உள்ள இரண்டு அமைச்சர்கள் சேர்ந்து மதுரை மாநகராட்சியில் 200 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளார்கள். ஐந்து மண்டல தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளார்கள். ஒரு மேயர் நீக்கப்பட்டுள்ளார், அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கை அனைத்திற்கும் முன்னதாக அதிமுக ஆர்ப்பாட்டம் செய்தோம். மதுரை மெட்ரோ ரயில் குறித்து திமுக நடத்தும் ஆர்ப்பாட்டம் நாடகம். இது திமுகவிற்கு கைவந்த கலை. மதுரை மக்களை திமுக ஏமாற்றுகிறது. கேரளாவிற்கு மெட்ரோ திட்டம் கிடைத்திருக்கிறது. கேரளா முதல்வர் பினராயி விஜயன் nda கூட்டணியில் இருக்கிறாரா?  மதுரை மக்களுக்கு மெட்ரோ கிடைக்க வேண்டும் என்று திமுக அரசு நினைத்து இருந்தால் முறையாக செயல்பட்டிருக்க வேண்டும். திட்டத்தை அனுப்பி இருக்க வேண்டும். மதுரை மக்களுக்கு நல்லது செய்வது போல திமுக நாடகமாடுகிறது. SIR பணிகள் குறித்து முதலமைச்சர் கேட்கிறார். எஸ் ஐ ஆர் வேண்டாம் என்று திமுக அரசு வழக்கு போட்டார்கள். மெட்ரோ ரயில் திட்டத்திற்கு வழக்கு போட வேண்டியதுதானே? 

 

மீனாட்சி சொக்கநாதர் விரும்புகிறார்

 

திமுக 2026 தேர்தலை நாடகமாடி ஜெயிக்க வேண்டும் என்று நினைக்கின்றது. சதுரங்க வேட்டை பாணியில் மக்களை ஏமாற்றி திமுக ஆட்சிக்கு வந்துவிட்டது. மீண்டும் மக்களை திமுக ஏமாற்றக்கூடாது. மதுரையை வைத்து திமுக நாடகமாடக்கூடாது. 2026 தேர்தலுக்காக திமுக அரசு மெட்ரோ குறித்து ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. மெட்ரோ வருவதற்கு திமுக அரசுக்கு விருப்பமில்லை. ஆளுங்கட்சி நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் 2000 பேர் தான் கலந்திருக்கிறார்கள். மெட்ரோ ரயில் குறித்து மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 20 லட்சம் வாக்காளர்கள் மதுரையில் இருக்கிறார்கள் அந்த குறிப்பை மத்திய அரசுக்கு திமுக அரசு அனுப்பி இருக்க வேண்டும். மதுரை மெட்ரோ ரயில் குறித்து திமுக செய்யாததை அதிமுக செய்யும். மதுரை மீனாட்சி சொக்கநாதர் அதிமுக ஆட்சியில் தான் வரும் என்று கடவுள் நினைக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி தான் மதுரை மெட்ரோ ரயிலை துவக்கி வைக்க வேண்டும், அதிமுக ஆட்சியில் தான் மதுரை மெட்ரோ ரயில் வரவேண்டும் என்று மதுரை மீனாட்சி சொக்கநாதர் விரும்புகிறார். மதுரை மக்களும் அதைத்தான் விரும்புகிறார்கள். திமுக மீண்டும் ஆட்சிக்கு வராது. வரலாறு மிகவும் முக்கியம். திமுக இரண்டு முறை ஆட்சியில் இருந்தது இல்லை. எம்ஜிஆர் காலத்தில் இருந்து இரண்டு முறை திமுக ஆட்சியில் இருந்தது இல்லை” என்றார்.