தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. திண்டுக்கல், தேனி, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக விளங்குகிறது வைகை அணை. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்ததால் வைகை அணை 5 முறை முழு கொள்ளளவை எட்டியது. மேலும் தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால் அணையின் நீர்மட்டம் கடந்த 9 மாதங்களாக 69 அடியாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
சொத்து வரி உயர்வை திரும்ப பெறுக.. தமிழ்நாடு அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்சொத்து வரி உயர்வை திரும்ப பெறுக.. தமிழ்நாடு அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
உலக புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழாவையொட்டி ஒவ்வொரு ஆண்டும் வைகை அணையில் இருந்து ஆற்றில் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். அதுவும் அணையில் போதுமான நீர்இருப்பை பொறுத்து தண்ணீர் திறக்கப்படும். அணையில் நீர்இருப்பு இல்லாத நேரத்தில் வைகை ஆற்றில் பள்ளம் தோண்டி அதில் தண்ணீரை நிரப்பி, கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா நடத்தப்படும்.
மேட்டூர் அணையின் நீர் வரத்து 2,035 கன அடியில் இருந்து 2,048 அடியாக அதிகரிப்பு இதற்கிடையே கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மதுரை சித்திரை திருவிழா, பக்தர்கள் இன்றி நடத்தப்பட்டது. தற்போது கொரோனா பரவல் வெகுவாக குறைந்ததை அடுத்து இந்த ஆண்டு மதுரை சித்திரை திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி மதுரையில் வருகிற 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா தொடங்க உள்ளது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 16ஆம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற உள்ளது. இதையொட்டி வைகை அணையில் இருந்து வருகிற 11 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை 6 நாட்கள் வைகை ஆற்றில் தண்ணீர் திறந்துவிட பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
ஆன்லைன் பண மோசடி தொடர்பான புகார்களை 1930 என்ற எண்ணில் அளிக்கலாம்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்