சென்னை செல்வதற்காக  மதுரை விமான நிலையம் வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில்
 
பட்ஜெட் குறித்த கேள்விக்கு
 
தமிழக அரசு நிதிநிலை அறிக்கை வருகிற 20-ஆம் தேதி அன்று தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிவந்தவுடன் என்னுடைய கருத்தை சொல்கிறேன்.
 
வாய்ப்பு இருந்தால் உறுதியாக டி.டி.வி., தினகரன் இணைந்து செயல்படுவேன் உறுதியாக. கூடிய விரைவில் சசிகலாவை சந்திப்பேன்.
 
இ.பி.எஸ்.,இன் நடவடிக்கை ஆரம்பத்தில் இருந்து இன்றுவரை சட்ட நியதிக்கு புறம்பாக நடைபெறுகிறது என்பது அனைவருக்கும் தெரியும்.
 
உச்சநீதிமன்ற தீர்ப்பை குறித்த கேள்விக்கு
 
மக்கள் தீர்ப்பை எதிர்நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்.. என்றார்
 
முன்னாள் அமைச்சர்கள் மக்களை அச்சுறுத்தும் விதமாக பேட்டி தருவது தொடர்பான கேள்விக்கு
 
புத்தி இல்லாதவர்கள் என்பதுபோல் சைகை காண்பித்தார் ஓ.பி.எஸ்
 
வாய்ப்பு இருந்தால் உறுதியாக டிடிவி தினகரன் இணைந்து செயல்படுவேன். கூடிய விரைவில் சசிகலாவை சந்திப்பேன் என ஓபிஎஸ் கூறியிருப்பது புது பரபரப்பை கிளப்பியுள்ளது