கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ரவுடி வரிச்சீயூர் செல்வத்திற்கு ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
ஒருவர் காணவில்லை என புகார் கொடுக்கப்பட்டுள்ளது அந்த வழக்கை கொலை வழக்காக காவல்துறை மாற்றி உள்ளது அதற்கான எந்த சாட்சியங்களையோ ஆதாரங்களையோ காவல்துறை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வில்லை - நீதிபதி
காணாமல் போனவர் டிரைவர் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது அதற்கான எந்த ஆதாரங்களையும் காவல்துறை சமர்ப்பிக்கவில்லை ஏன் - நீதிபதி கேள்வி
இந்த மனு நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது அப்போது அரசு தரப்பில் , ”வழக்கு ஒட்டப்பிடாரம் காவல்துறைக்கு மாற்றப்பட்டு விசாரணை தொடங்கியுள்ளது. மேலும் வழக்கில் ஜாமின் வழங்கினால், விசாரணையில் பாதிப்பு ஏற்படும் என வாதிடப்பட்டது. இதனை தொடர்ந்து மனுதாரர் தரப்பில், புவனேஸ்வரன் காணாமல் போய்விட்டார் என்று தான் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறை கொலை வழக்காக மாற்றி மனு தாரரை கைது செய்து உள்ளனர். அதற்கு எந்த ஒரு சாட்சியம் இல்லை” என வாதிட்டார்.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, ”காணாமல் போனதாக புவனேஸ்வரன் மனைவி புகார் கொடுத்துள்ளார், எதன் அடிப்படையில் காவல்துறை புவனேஸ்வரன் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற முடிவுக்கு வந்து உள்ளீர்கள். மேலும் அவர் டிரைவராக வேலை பார்த்ததாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது, அதற்கான ஆவணங்கள் நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்டுள்ளதா? ஒருவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது உயிருடன் இருக்கிறாரா என்பது குறித்து ஆதாரங்கள் சமர்பிக்கப்படவில்லை. வழக்கை கொலை வழக்காக காவல்துறை பதிவு செய்து மனுதாரரை கைது செய்துள்ளீர்கள். எதன் அடிப்படையில் கைது செய்யப்பட்டது?” என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, வழக்கில் உரிய சாட்சியங்களும், ஆவணங்களையும் காவல்துறை தாக்கல் செய்ய தவறியதால் மனுதாரருக்கு நிபந்தனைகள் விதித்து ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.