பழனி தைப்பூசத் திருவிழாவிற்கு அன்னதானம் வழங்குவதற்கு அனுமதி வாங்க வேண்டும் என தெரிவிக்கப் பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, தமிழக அமைச்சர் சேகர் பாபுவை  நம்மை பிடித்த ஏழரை சேகர்பாபு என கடுமையாக விமர்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


ஆயுதத் தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து: 5 பேர் பலி! மற்றவர்களின் நிலை? என்ன நடந்தது?



 நம்மை பிடித்த ஏழரை சேகர்பாபு.. அமைச்சரை கடுமையாக விமர்சித்த ஹெச்.ராஜா


திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்திற்கு பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா வருகை தந்தார்.  பாஜக மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் நகரத்தலைவர் ஆனந்தகுமார் உள்ளிட்டோர் ஹெச்.ராஜாவிற்கு வரவேற்பு அளித்தனர்‌. தொடர்ந்து ஹெச்.ராஜா பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது, அரிடாப்பட்டி மக்களின் கோரிக்கையை ஏற்று டங்ஸ்டன் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்து அறிவிப்பு செய்துள்ளதற்கு பிரதமர் நரேந்திரமோடி, மத்திய அமைச்சர் கிஷன் குமார் ரெட்டி ஆகியோருக்கு தமிழக மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறினார். மேலும் பழனியில் நடைபெறவுள்ள தைப்பூசத் திருவிழாவின்போது பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு பொதுமக்கள் அன்னதானம் வழங்குவதற்கு அனுமதி பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்தார்.




இந்துமத வழிபாட்டு உரிமையில் திமுக அரசு தொடர்ந்து விரோதமாக செயல்பட்டு வருகிறது என்றும், திமுக கட்சி மாநாடு நடைபெறும் போது தொண்டர்களுக்கு அளிக்கும் உணவு குறித்து அனுமதி பெற்று தான் மாநாடு நடத்துகிறீர்களா என்றும் கேள்வி எழுப்பினார். மேலும் நம்மை பிடித்த ஏழரை இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு என்றும், அவர் இந்துவே கிடையாது என்றும், இந்து சமய அறநிலைத்துறை அமைச்சராக இருந்து கொண்டு அல்லேலுயா என்று கோஷமிட்ட போதே அவரது பதவியை பறித்திருக்க வேண்டும் என்றும் மிகவும் கடுமையாக விமர்சனம் செய்தார். இந்து சமய அறநிலைத்துறை அமைச்சகம் கிரிப்டோ கையில் மாட்டிக் கொண்டு சீரழிகிறது என்று தெரிவித்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவது ஒரு இந்துவின் கடமை என்கிற அடிப்படையில் யாரிடமும் அனுமதி இன்றி அன்னதானம் வழங்குவோம் என்றும் ராஜா தெரிவித்தார்.   


Donald Trump: ஆத்தி..! உலக நாடுகளை மிரட்டும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.. உற்பத்தியா? வரியா?


திருப்பரங்குன்றம் மலையில் 50 சென்ட் நிலமானது வக்பு வாரியத்திற்கு சொந்தம் என்று அறிவித்திருப்பது தவறு என்றும், 1931 ஆம் ஆண்டு ப்ரிவியூ கவுன்சிலில் தெரிவிக்கப்பட்டபடி திருப்பரங்குன்றம் கோவிலை முறையாக பாதுகாக்க வேண்டும் என்றும், இது போன்ற மோசடிகளை தவிர்ப்பதற்காகவே வக்பு வாரிய திருத்தச் சட்டம் கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவித்தார். ஹிந்து முஸ்லிம் மோதலை உருவாக்கும் வகையில் நடந்து கொள்ளும் மனிதநேய மக்கள் கட்சி என்பது மனிதநேயமே இல்லாத கட்சியாகும் என்றும் தெரிவித்தார். அண்ணா பல்கலைக்கழக மாணவி பலாத்கார விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன் வலிப்பு வந்தது போல் நடித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஞானசேகருக்கு ஆதரவாக  காவல்துறையை சேர்ந்த 6 பேர் செயல்பட்டுள்ளதாக புகார் எழுந்து உள்ளது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி காவல்துறையின் ஈரல் பகுதி அழுகிவிட்டது என தெரிவித்திருந்தார். தற்போது அவருடைய மகன் ஆட்சியில் முழுவதுமாக அழுகிவிட்டது என குற்றம் சாட்டினார்.