விருதுநகர், மானாமதுரை வழியாக எர்ணாகுளம் டூ வேளாங்கண்ணி.. சிறப்பு கட்டண ரயில் விவரம்!
விருதுநகர், மானாமதுரை வழியாக எர்ணாகுளம் - நாகப்பட்டினம் ரயில் நிலையங்களுக்கிடையே வாராந்திர சிறப்பு கட்டண ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
Continues below advertisement

ரயில்
விருதுநகர், மானாமதுரை வழியாக எர்ணாகுளம் - நாகப்பட்டினம் ரயில் நிலையங்களுக்கிடையே வாராந்திர சிறப்பு கட்டண ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த ரயிலின் சேவை நவம்பர் மாதம் வரையும் வேளாங்கண்ணி வரையும் நீட்டிக்கப்படுகிறது.
அதன்படி எர்ணாகுளம் - வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு கட்டண ரயில் (06035) எர்ணாகுளத்தில் இருந்து ஆகஸ்ட் 13 முதல் நவம்பர் 12 வரை சனிக்கிழமைகளில் மதியம் 12.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 05.50 மணிக்கு வேளாங்கண்ணி சென்று சேரும். மறு மார்க்கத்தில் வேளாங்கண்ணி - எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு கட்டண ரயில் (06036) வேளாங்கண்ணியில் இருந்து ஆகஸ்ட் 14 முதல் நவம்பர் 13 வரை ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 06.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.00 மணிக்கு எர்ணாகுளம் சென்று சேரும்.
இந்த ரயில்கள் கோட்டயம், செங்கனாச்சேரி, திருவல்லா, செங்கனூர், மாவேலிக்கரா, காயங்குளம், கருநாகப்பள்ளி, சாஸ்தான்கோட்டா, கொல்லம், குண்டரா, கொட்டாரக்கரா, அவனீஸ்வரம், புனலூர், தென்மலை, செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, காரைக்குடி, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sellur Raju: "பிரிந்து சென்றவர்கள் மனம் திருந்தி வந்தால் ஏற்றுக் கொள்வோம்" - பச்சை கொடி காட்டும் செல்லூர் ராஜூ !
இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, 2 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2 ரயில் மேலாளர் அறையுடன் கூடிய சரக்கு பெட்டிகள் இணைக்கப்படும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Continues below advertisement
Just In
Train cancelled: விழுப்புரம் -புதுச்சேரி ரயில் சேவை ரத்து: பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!
சோகத்திலும் சோகம்; காசாவில் நிவாரண விநியோகத்தின்போது நெரிசலில் 19 பேர் பலி - என்ன கொடுமை இது.?!
தேனி மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! சென்னை- போடி ரயில் நேரம் மாற்றம்: புதிய அட்டவணை இதோ!
"எடுத்த நாள் முதல், இந்த நாள் வரை, வண்டியை விடவில்லை" முதல்வர் ஸ்டாலினை பங்கமாக கலாய்த்த இபிஎஸ்
தமிழகத்தை உலுக்கிய காதலர்கள் கொலை வழக்கு: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! தூக்கு தண்டனை பெற்றவர் விடுதலை, அதிர்ச்சியில் உறவினர்கள்!
”தேர்தல் வந்தால் மட்டும் தான் அக்கறையா? தியாகி போல் பேசும் செந்தில் பாலாஜி” விளாசிய எம்.ஆர்.விஜயபாஸ்கர்
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.