திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பூ மார்கெட் தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற பூ மார்க்கெட்டுகளில் ஒன்றாகவும். நிலக்கோட்டை அதை சுற்றியுள்ள பகுதிகளில் பூக்கள் சாகுபடி அதிகளவில் செய்யப்படுவதாலும்,தமிழகத்தில் மல்லிகைப்பூ அதிகம் ஏற்றுமதி செய்யப்படும் ஏற்றுமதி மையமாகவும் இம்மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. மலேசியா, சிங்கப்பூர்,கனடா,தாய்லாந்து, அமெரிக்கா,இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு தினமும் 5-டன் பூக்களுக்கு குறையாமல் ஏற்றுமதி செய்யப்படுகிறது.மேலும் கோவா, கர்நாடகா,கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் தினமும் ஆயிரக்கணக்கான கிலோ பூக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.




அது மட்டுமல்லாம் இங்கு வாசனை நிறைந்த மல்லிகைப்பூக்கள் குறைந்த விலையில் கிடைப்பதால் தற்போது நிலக்கோட்டையைச் சுற்றி 10-க்கும் மேற்பட்ட வாசனை திரவிடங்கள் தயாரிக்கும் நிறுவனங்களும் தோன்றியுள்ளது. இதனால் பூ பறிப்பது முதல் கட்டுவது ஏற்றுமதி செய்வது வரை சுமார் 5000க்கும் மேற்பட்ட ஆண் பெண் தொழிலாளர்கள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இந்த பகுதியில் பல வகையான இலைகள்,காய்கறிகள், பலவண்ண பூக்களில் பிரமாண்ட மாலைகள் என அடிக்கடி வித்தியாசமான முறையில் மாலைகள் கட்டுவதற்கான ஆர்டர்கள் குவிவது வழக்கம், இதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற தோவாளை சுடலைமாடன் சாமிக்கு பக்தர் ஒருவரால் நேற்றிக்கடனாக டிரைபுரூட் எனப்படும் உலர் பழங்கலான மாலை ஆர்டரின் பேரில் தயார் செய்யப்பட்டது. 




இது குறித்து பூ வியாபாரியும் ஏற்றுமதியாளருமான பாலமுருகன் கூறுகையில் பிரசித்தி பெற்ற நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் தினமும் டன் கணக்கில் பூக்கள் ஏற்றுமதியானாலும்,  நூற்றுக்கனக்கான தொழிலாளர்களால் பூக்களை மாலையாக செய்தும் ஏற்றுமதி செய்வது வழக்கம். அதன்படி கன்னியாகுமரி மாவட்டம் தோவளை உள்ள சக்திவாய்ந்த சுடலைமாடன் சாமிக்கு பத்தர் ஒருவரால் ஸ்வாமியின் சிலை உயரத்திற்கு சுமார் 8-அடி உயரத்திற்கு டிரை புருட் எனப்படும் உலர் பழங்களான பாதாம்,பிஸ்தா, முந்திரி,ஜெர்ரி, கறுப்பு திராட்சை போன்ற சத்து மிக்க உலர்பழங்களிலான மாலை வேண்டும் என ஆர்டர் செய்திருந்தார்,




இதனையடுத்து கடந்த 7-நாட்களாக சுமார் 150-பணியாளர்களைக் கொண்டு சரியாக பதப்படுத்தப்பட்ட பழங்களை தேர்வு செய்து 3.50-இலட்சம் மதிப்பில 3-மாலைகள் தயாரித்துள்ளோம், முழுக்க முழுக்க கைகளிலே கோர்த்து தயார் செய்துள்ளோம்,தெய்வப் பணிக்கு என்பதால் விரதமிருந்து ஒரு வாரமாக இரவு பகலாக பராமரிப்பு செய்து சிறப்பாக செய்து முடித்தோம் என கூறினார்,மேலும் தினமும் ஆயிரக்கணக்கான கிலோ பூக்கள் மூலம் பல விதங்களில் பிரம்மாண்டமாலை செய்யும் இந்த பகுதியில் டிரைபுரூட்ஸ் எனப்படும் உலர் பழங்களால் தயாரிக்கப்பட்ட மாலையை வியாபாரிகள் மட்டுமின்றி பொதுமக்கள் விவசாயிகள் என ஏராளமானோர் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.