திண்டுக்கல் மாவட்டத்தில் கொலை, கொள்ளை, போதை பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதில் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோரை பிடிக்க மாவட்ட அளவில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த தனிப்படை போலீசார் ரகசியமாக கண்காணித்து போதை பொருள் மற்றும் புகையிலை பொருட்களை கடத்தல், விற்பனையில் ஈடுபடுவோரை கைது செய்கின்றனர்.


JEE Main 2023: ஜே.இ.இ. மெயின் 2023 ஹால் டிக்கெட் வெளியீடு; பதிவிறக்குவது எப்படி?- விவரம்



மேலும் தொடர்ச்சியாக போதை பொருள் கடத்தல், விற்பனையில் ஈடுபடுவோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி அவர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களின் சொத்துகளும் முடக்கப்படுகின்றன. அதேபோல் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள், கொலை மற்றும் கொள்ளையில் சிக்கியர்களும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுகின்றனர்.


Crime: நடனமாட மறுத்த 10 வயது சிறுமி.. பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்த இளைஞர்கள் - பீகாரில் கொடூரம்



IND vs NZ 2nd ODI: மிரட்டல் பவுலிங்.. அசத்தல் பேட்டிங்.. நியூசிலாந்தை ஊதிதள்ளிய இந்தியா..! தொடரை வென்று அசத்தல்..!
அந்த வகையில் கடந்த 2022-ம் ஆண்டில் மட்டும் கொலை, கொள்ளை, போதை பொருட்கள் விற்பனை, பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என மொத்தம் 125 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அதேபோல் கடந்த 2021-ம் ஆண்டிலும் 125 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டில் இதுவரை ஒருவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். மேலும் தொடர் குற்றத்தில் ஈடுபடும் நபர்களை போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண