பழனி முருகன் கோவிலில் நடைபெறும் பிரசித்தி பெற்ற திருவிழாக்களில் ஒன்று பங்குனி உத்திரம் ஆகும். இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா, கடந்த மாதம் 29-ந்தேதி தொடங்கி 10 நாட்கள் நடந்தது.  இதையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்காவடி எடுத்து பழனிக்கு வந்தனர். மேலும் ஏராளமான பக்தர்கள் மயில்காவடி எடுத்தும், அலகு குத்தியும் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.


Crime: வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை... டெலிவரி செய்யும் நபர் கைது!


தற்போது திருவிழா முடிந்த பிறகும் ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் பழனிக்கு வந்த வண்ணம் உள்ளனர். அதன்படி சேலம் அரிசிபாளையத்தை சேர்ந்த பக்தர்கள் 100-க்கும் மேற்பட்டோர் பழனி முருகன் கோவிலுக்கு  வந்தனர். முன்னதாக அந்த குழுவை சேர்ந்த 6 பக்தர்கள், ராட்சத கிரேன் மூலம் பறவைக்காவடி எடுத்து பழனி கிரிவீதிகளில் வலம் வந்து பாதவிநாயகர் கோவிலை அடைந்தனர்.


Nigeria : நைஜீரியாவில் பயங்கரம்... துப்பாக்கிச் சூட்டில் அப்பாவி மக்கள் 50 பேர் உயிரிழப்பு...!


Nigeria : நைஜீரியாவில் பயங்கரம்... துப்பாக்கிச் சூட்டில் அப்பாவி மக்கள் 50 பேர் உயிரிழப்பு...!


இதில் பெண் பக்தர் ஒருவர் அலகு குத்தி பறவை காவடி எடுத்து வந்தார். பின்னர் அவர்கள் மலைக்கோவிலுக்கு சென்று முருகப்பெருமானை வழிபட்டனர். முன்னதாக பழனி கிரிவீதிகளில் பறவைக்காவடியில் வந்த பக்தர்களை பொதுமக்கள் தங்கள் செல்போனில் படம் பிடித்தனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், கடந்த 39 ஆண்டுகளாக எங்கள் பகுதியில் இருந்து பழனிக்கு வருகிறோம். பங்குனி உத்திர திருவிழா முடிந்த பிறகு சேலத்தில் இருந்து மயில் காவடி, தீர்த்தக்காவடிகளுடன் பழனிக்கு புறப்படுவோம். பழனிக்கு வந்து அலகு குத்தி, பறவைக்காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவோம் என்றனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண