தமிழ்நாட்டில் "கள ஆய்வில் முதலமைச்சர்" என்ற திட்டத்தை தொடங்கி வைத்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று, வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறார்.


இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, மதுரையில் 5 மாவட்ட பிரதிநிதிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.


அப்போது, பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் விவசாயிகள், மீனவர்கள், சிறு, குறு தொழில் துறையினரின் குறைகளை கேட்டறிந்துள்ளேன், அனைத்து தரப்பினரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என மதுரை ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.