மதுரையில் இன்று  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்  மா.சுப்பிரமணியன்  பாலரெங்காபுரத்தில் உள்ள கதிர்வீச்சுத்துறை மண்டல புற்றுநோய் சிகிச்சை மையத்தில் வெளிப்புற கோபால்ட்-60 கதிர்வீச்சு சிகிச்சை வசதியையும், அரசு இராஜாஜி மருத்துவமனையைச் சார்ந்த விபத்து அவசர சிகிச்சை மையத்தில் தென் தமிழகத்தில் முதன்முறையாக புதிய எலும்பு வங்கி, முதுகுதண்டுவட காய படுக்கைப்புண் சிகிச்சை மையம் மற்றும் மாடித்தோட்ட வளாகத்தையும் தொடங்கி வைத்தார். 40 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள எலும்பு வங்கியினை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திறந்து வைக்கும் போது உடன்  வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு முதன்மை செயலாளர், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித்துறை இயக்குநர்,மாவட்ட ஆட்சியர், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் இருந்தனர்.

 



 

தென் மாவட்டங்களில் மிக முக்கியமான மருத்துவமனையாக விளங்க கூடிய  மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மதுரை மட்டுமில்லாமல் சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்ட மக்கள் பயன்பெறுகின்றனர். தனியார் மருத்துவமனைகளில் கூட செய்ய முடியாத பல்வேறு முக்கிய அறுவை சிகிக்களை வெற்றிகரமாக செய்யப்பட்டு வருகிறது. கொரோனா காலகட்டத்தில் அதிகளவு தொற்று பாதிக்கப்பட்டிருந்த நிலையில் பலரும் விரைவாக குணமடைந்து வீடு திரும்பினர்.  ராஜாஜி மருத்துவமனையில் 20க்கும் மேற்பட்ட துறைகள் செயல்பட்டு வருகிறது.  இங்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்துசெல்கின்றனர். இந்நிலையில் மதுரையில் எலும்பு வங்கி தொடங்கப்பட்டது ஏழை நோயாளிகளுக்கு மற்றும் தென் தமிழகத்தின் மக்களுக்கு உண்மையான வரப்பிரசாதம் என்று சொல்லப்படுகிறது.













 

இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் தரப்பில், ’’எலும்பு வங்கி என்பது பல்வேறு நோயாளிகளுக்கு பயன்படுத்தக்கூடிய எலும்புகளை மீட்டெடுப்பது, பதப்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் செயல்முறையாகும். ஒருவரிடமிருந்து பாதுகாப்பாக எடுக்கப்படும் எலும்பு, அதே நபருக்கு பொறுத்தப்பட்டால் ஆட்டோகிராஃப்ட் எனப்படும். அதேசமயம் ஒருவரிடமிருந்து எடுக்கப்படும் எலும்புகளை வேறு ஒருவருக்கு பொருத்தினால் அல்லோகிராஃப்ட் என்று அழைக்கப்படுகிறது, அதிவேக காய விபத்துக்கள் மற்றும் புற்றுநோய் சிகிச்சையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள். எலும்பு தீட்டுதல்கள் மற்றும் திசு அல்வோகிராஃப்ட்களின் தேவையை அதிகரித்துள்ளது நம் நாட்டில் மிகக் குறைவான எலும்பு வங்கிகளே உள்ளதால். திசு அலோகிராஃப்டுகளுக்கு பற்றாக்குறை உள்ளது. எனவே நாம் எலும்பு மாற்றுகளை சார்ந்து இருக்கிறோம். எலும்பு அலோகிராஃப்ட்கள் இயற்கையான எலும்பைப் இணைக்கப்படும் தன்மையுள்ளன.




 

உயிருள்ள எலும்பு தானம் செய்பவரிடம் இருந்தோ அல்லது இறந்து நன்கொடையாளரிடம் இருந்தோ ஓட்டுக்களை மீட்டெடுக்கலாம். உயிருள்ள நன்கொடையாளர்கள் முக்கியமாக மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட நோயாளிகள் அல்லது உயிரோட்டத்துடன் பொறுத்த முடியாத நிலையில் கால் துண்டிக்கப்பட்டவர்கள். இறந்த நன்கொடையாளரிடம் இருந்து இறந்த நேரத்திலிருந்து 12 - 24 மணி நேரத்திற்குள். தேவையான எலும்புகளை உறவினர்களின் ஒப்புதலுடன் எடுத்து பயன்படுத்தலாம். அனைத்து நன் கொடையாளர்களும் பரவக்கூடிய நோய்களுக்கு முழுமையாக பரிசோதிக்கப்படுகிறார்கள் மாற்றுச் செயல்பாட்டின் போது எந்த நோய்த் தொற்றும் பரவவில்லை என்பதை இரட்டிப்பாக உறுதிசெய்ய, வாங்கப்பட்ட ஓட்டுக்கள் செயலாக்கப்படுவதற்கு முன்பு மீண்டும். சோதிக்கப்படுகின்றன. இறந்த நன்கொடையாளர்களின் உடல்கள் மிகுந்த மரியாதையுடன் கணியமான முறையில் புனரமைக்கப்பட வேண்டும். அதாவது இறுதி சடங்குகள் வரை நன்கொடையாளரின் கண்ணியம் பராமரிக்கப்படும்.



 

ஈரமான மற்றும் உலர் செயலாக்க அறையில் எலும்பு திஸ்ஸுகள் செயலாக்கம் மேற்கொள்ளப்படுகிறது. நீரின் உள்ளடக்கத்தை அகற்றாமல் சேமிக்கப்படும் திஸ்ஸுகள் பிரெஷ் பிரோஸின் எலும்பு திஸ்ஸுகள் என்றும். நீரின் உள்ளடக்கம் அகற்றப்பட்டவை ஃப்ரீஸ் ட்ரைட் அல்லது வியோபிலைஸ்டு என்றும் அழைக்கப்படுகின்றன. பெறுநரின் தேவையைப் பொறுத்து திஸ்ஸுகள் அதற்கேற்ப செயலாக்கப்படுகின்றன. பிரெஷ் பிரோஸின் எலும்பு திஸ்ஸுகள் 5 வருட காலம் சேமிக்கலாம் மேலும் ஃப்ரீஸ் ட்ரைட் அல்லது லியோபிலைஸ்டு திஸ்ஸுகள் 15 வருடம் வரை சேமிக்கலாம். எலும்பு திஸ்ஸுகள் பதப்படுத்தப்படும் முழு நேரத்திலும் மிகவும் சுத்தமான சூழல் பராமரிக்கப்படுகிறது. செயலாக்கத்திற்குப் பிறகு, எலும்பு திஸ்ஸுகள் டீப் பிரேஸிர் ஒன்றில் சுமார் மைனஸ் 80 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பாதுகாக்கப்படுகின்றன. முழுமையான கிருமி நீக்கம் செய்வதற்காக எலும்பு திஸ்ஸுகள் 10 - 25 கிலோ கிரேகாமா கதிர்வீச்சுக்கு உட்படுத்தப்படுகின்றன.



 

முதுகெலும்பு இணைப்பு அறுவை சிகிச்சைகள். பல தசைநார் புனரமைப்பு, திருத்தல் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகளில் எலும்பு குறைபாடுகளை நிவர்த்தி செய்தல். விபத்துக்குப் பிந்தைய எலும்பு இழப்பு புனரமைப்பு, மற்றும் புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டதைத் தொடர்ந்து மூட்டு காப்பு நடைமுறைகள் போன்ற பல நிலைகளில் திசு அலோகிராஃப்ட்கள் தேவைப்படுகின்றன. நோயாளியின் நோயுற்ற தன்மை, அறுவை சிகிச்சை நேரம். அறுவை சிகிச்சை செலவு ஆகியவை மிகவும் குறைக்கப்படலாம்” என்கின்றனர்.

 







மக்கள் மத்தியில் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு செய்தது போன்றே எலும்பு தானம் செய்வது குறித்தும் விழிப்புணர்வு செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த எலும்பு வங்கியின் செயல்பாடு தற்போது துவங்கியிருந்தாலும் அடுத்த தலைமுறைக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்கின்றனர் எலும்பு முறிவு மருத்துவர்கள். இந்த எலும்பு வங்கியில் பேராசிரியர்கள்,ஆய்வக உதவியாளர்கள் என 5 பேர் பணியில் இருப்பார்கள்.