நத்தம் தாலுகா செந்துறை அருகே உள்ள பெரியூர்பட்டியில் ஸ்ரீமந்தையம்மன் கருத்தநாயக்கர் மந்தை கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா கடந்த 5-ந்தேதி முதல் பக்தர்கள் காப்பு கட்டி விரதத்துடன் தொடங்கியது. 8 நாட்கள் நடைபெற்ற திருவிழாவில் 18 பட்டிக்கு கட்டுப்பட்ட 96 கிராமங்களை சேர்ந்த ராஜகம்பளத்து நாயக்கர் சமுதாய மக்கள் தங்கள் பகுதியில் வளர்க்கும் சாமி மாடுகளுடன் கலந்து கொண்டனர்.


குடும்ப தலைவிகளுக்கு விரைவில் மாதம் ரூ.1000.. இப்போது தகவல் சேகரிக்கும் பணிகளில்.. - நிதியமைச்சர் கொடுத்த அப்டேட்




விழாவில் கலந்து கொண்ட ஆண்களில் பெரும்பாலானோர் சட்டை அணியாமல் இடுப்பில் வெள்ளை வேட்டியும், தலையில் துண்டும் கட்டியிருந்தனர். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக கருதப்படுகிற மாடுகள் மாலையை தாண்டும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி சிறப்பு சடங்குகள் செய்யப்பட்டு, பக்தர்கள் கொண்டு வந்த மாடுகள் மந்தைகளில் இருந்து ஒவ்வொன்றாக கோவில் முன்பு கொண்டு வரப்பட்டன. பின்னர் அவைகளுக்கு பூஜை நடந்தது.





இதைத்தொடர்ந்து கோவிலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கொத்துகொம்பு என்னுமிடத்துக்கு அனைத்து மாடுகளும் கொண்டு செல்லப்பட்டன. பின்னர் அங்கிருந்து கரடு முரடான பாதை வழியாக மாடுகள் கோவிலை நோக்கி விரட்டி கொண்டு வரப்பட்டன. மாடுகளுடன், ஆண்கள் காலில் செருப்பு அணியாமல் ஓடி வந்தனர். பின்னர் மாலையை தாண்டும் நிகழ்ச்சியில், தரையில் போடப்பட்டிருந்த வெள்ளை துணியை தாண்ட வைத்தனர். இதில் 200 மாடுகள் பங்கேற்றன. இதில் முதல் 3 இடங்களை பிடித்த மாடுகள் கவுரவிக்கப்பட்டன. விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.







 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண