இரக்கமே  இல்லாத 'இதயம் டிரஸ்ட்' மதுரையில் குழந்தைகளை கடத்தி விற்பனை செய்த சம்பவம் சமீபத்தில் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. மனநலம் குன்றிய இளம் பெண்ணின், ஆண் குழந்தையை ஐந்து லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்துவிட்டு, குழந்தை கொரோனாவால் இறந்ததாக கூறி சினிமா லெவலுக்கு நாடகமாடியது அம்பலமானது. இது தொடர்பான விசாரணையில்  கர்நாடகாவை சேர்ந்த  மற்றொரு குழந்தையும் மீட்கப்பட்டது. மேலூரை சேர்ந்த ஐஸ்வர்யாவின் குழந்தை கொரோனாவால் இறந்தாக போலியான ஆவணங்கள் தயார் செய்ய உதவிய அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுருந்தார். மேலும் அடுத்த கட்டமாக தமிழ்நாடு முழுதும் இருக்கும் காப்பகங்களில் ஆய்வு நடத்தக்கூறி சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் உத்தவிட்டிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.


இதை சற்று கவனிக்கவும் - *Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*



இந்த காப்பகத்தில் இருந்த இரண்டு குழந்தைகள் கொரோனா பாதிக்கப்பட்டு இறந்ததாக கூறி வேறு நபர்களுக்கு குழந்தைகளை விலைக்கு விற்பனை செய்த வழக்கில் காப்பகத்தின் இயக்குநர் சிவக்குமார், இவரது உதவியாளர் மதர்ஷா, ஒருங்கிணைப்பாளர் கலைவாணி உள்ளிட்ட பலரை தல்லாகுளம் போலீசார் கைது செய்தனர்.  இவர்கள் அனைவரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் . இந்த வழக்கில் காப்பகத்தின் ஒருங்கிணைப்பாளர் கலைவாணி ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு செய்தார்.


மதுரை மாவட்டம் தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் -”ஒரு விழிப்புணர்வுதான்” - பூக்கடைக்காரர் மோகன்: மதுரையில் மணக்கும் மல்லிகைப்பூ மாஸ்க் !







இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையில் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

 


மதுரை இதயம் அறக்கட்டளைக்கு சொந்தமான இடங்களில் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியிருந்தது, அதுதொடர்பான விசாரணை நடைபெற்ற நிலையில் தற்போது காப்பகத்தில் ஒருங்கிணைப்பாளர் கலைவாணிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.