பசும்பொன்  தேவர் குரு பூஜைக்கு வாடகை வாகனங்களில் செல்ல அனுமதிக்க உத்தரவிட கோரிய வழக்கு.



தேவர் குருபூஜை விழாவிற்கு வாடகை வாகனங்களில் செல்ல  அனுமதிக்க முடியாது. வாடகை வாகனங்களில் செல்வதற்கு தடை விதித்த அரசின் உத்தரவை நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. அரசு குருபூஜை நாளன்று 500 அரசு பேருந்துகள் சிறப்பாக இயக்கப்படுவதாக தெரிவித்ததை தொடர்ந்து உயர்நீதிமன்ற மதுரை கிளை.


உசிலம்பட்டி வழக்கறிஞர்  சங்கிலி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு, பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழா ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 30 தேதி அரசு விழாவாக  கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு முத்துராமலிங்க தேவரின் 116வது ஜெயந்தி விழா மற்றும் 61வது குருபூஜை நடைபெற உள்ளது. முத்துராமலிங்கத்தேவர் பிறந்த ஊரான பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது நினைவு ஆலயத்தில் நிறுவப்பட்டுள்ள தேவர் சிலைக்கு அனைத்து கட்சி தலைவர்கள், பெரியோர்கள் மற்றும் சமுதாய மக்கள் மரியாதை செலுத்துவார்கள்.




இந்த நிகழ்விற்க்கு  தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும்  வருகை தர உள்ளனர். சொந்த வாகனம் இல்லாதவர்கள் வாடகை வாகனங்கள் மூலம் பசும்பொன் கிராமத்திற்கு வந்து மரியாதை செலுத்த  வாடகை வாகனங்கள் மூலம் வருவதற்கு காவல்துறையிடம் மனு அளித்தோம் ஆனால் அனுமதி மறுக்கபட்டது. எனவே, பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா நிகழ்வுகளில் கலந்துக்கொள்ள வாடகை வாகனங்கள் மூலம் செல்ல அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என தனது மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.சுந்தர் , சக்திவேல் ஆகியோர் முன் விசாரனைக்கு வந்தது. விசாரணையின் போது அரசு வழக்கறிஞர் திலக் குமார் மற்றும் ரவி ஆஜராகி  2017-லில் வாடகை வாகனத்தில் செல்ல உயர் நீதிமன்ற தடை  உத்தரவு உள்ளது. அதனை பின் பற்றி தற்போது வாடகை வாகன அனுமதி குடுப்பதில்லை.  மேலும் இராமநாதபுரம் மாவட்டத்தில்144 தடை உத்தரவு உள்ளது. இதனால் அனுமதிக்க முடியாது  ஆனால் மக்கள் தடையின்றி செல்ல 5 மாவட்டங்களில் இருந்து 500 பேருந்துகள் இயக்கபடுகின்றது, என தெரிவித்தனர்.





இதனக நீதிபதி அரசு விழாவான குருபூஜைக்கு வாடகை வாகனத்தில் செல்ல அனுமதி கோரி மனு தாக்கல் செய்ய பட்டுள்ளது. ஆனால் இராமநாதபுர மாவட்டத்தில் தற்போது 144 தடை உத்தரவு உள்ளது. அதனால் வாடகை வாகனங்களை அரசு அனுமதிக்க வில்லை. ஆனால் அரசு தரப்பில் பக்கத்து மாவட்டத்தில் இருந்து மக்கள் தடையின்றி வர 500 பேருந்துகள் இயக்க படுகிறது. மேலும்  புதுகோட்டை, தஞ்சாவூர், தேனி ,திண்டுக்கல் 
மாவட்டங்களில் இருந்து மக்கள் செல்ல கூடுதல் பேருந்துகள் இயக்க அரசு பரிசீலனை செய்ய உத்தரவிட்ட  நீதிபதிகள் வாடகை வாகனத்தில் செல்ல தடை விதித்த அரசின் உத்தரவிற்க்கு தடை விதிக்க முடியாது என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.