பல்வேறு பராமரிப்பு பணிகள் காரணமாக தமிழ்நாடு முழுவதும், மாதத்தில் ஒரு நாள் மின்சாரம் நிறுத்தப்படுவது வழக்கம். அவ்வாறு மின் நிறுத்தம் செய்யும் நாள்களில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். அதேபோன்று பருவம் மழை முன்னிட்டு அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம்.

  


காஞ்சிபுரத்தில் நாளை மின்தடை (Kanchipuram Power Shutdown Tomorrow)


மின்தடை மேற்கொள்ளப்படும் சமயங்களிலும், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுவது வழக்கம். சில சமயங்களில் குறிப்பிட்ட நேரத்தை விட முன்னதாகவும் பணிகள் முடிக்கப்பட்டு மின்சாரம் தரப்படும். அந்த வகையில் நாளை காஞ்சிபுரம் பகுதியில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், ஆரியபெரும்பாக்கம் துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் மின்தடை மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


சிறுகாவேரிபாக்கம் மற்றும் வெள்ளைகேட் பிரிவு, ஆரியபெரும்பாக்கம் துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் மின்தடை மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


சிறுகாவேரிபாக்கம் மற்றும் வெள்ளைகேட் பிரிவில் 230 கி.வோ. ஆரியபெரும்பாக்கம் துணைமின் நிலைய பராமரிப்பு பணிகளுக்காக வரும் 15.10.2024 செவ்வாய்கிழமை அன்று மேற்கொள்ளப்பட உள்ளது. அந்த நேரத்தில் கீழம்பி, பள்ளம்பி, சிறுகாவேரிபாக்கம், திம்மசமுத்திரம், கருப்படிதட்டிடை, மங்கையர்கரசி நகர், அச்சுகட்டு, ஜே.ஜே நகர், ஆரியபெரும்பாக்கம், கூரம், செம்பரம்பாக்கம், புதுப்பாக்கம், பெரியகரும்பூர், சித்தேரிமேடு, துலுக்கம்தண்டலம் ஆகிய பகுதிகளில 15.10.2024 செவ்வாய்கிழமை அன்று காலை 09.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரை மின் தடை ஏற்படும். இத்தகவலை தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் காஞ்சிபுரம் / வடக்கு கோட்ட செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.