காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களிலும் சில இடங்களில், அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் மின்தடை அறிவிப்பு.

Continues below advertisement

பல்வேறு பராமரிப்பு பணிகள் காரணமாக தமிழ்நாடு முழுவதும், மாதத்தில் ஒரு நாள் மின்சாரம் நிறுத்தப்படுவது வழக்கம். அவ்வாறு மின் நிறுத்தம் செய்யும் நாள்களில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். அதேபோன்று பருவம் மழை முன்னிட்டு அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம்.  

காஞ்சிபுரத்தில் நாளை மின்தடை  

காஞ்சிபுரம் ஓரிக்கை துணை மின் நிலையம் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாநகராட்சி ஓரிக்கை 110/33-11 கே.வி துணை மின் நிலையத்தில் 24.09.2025 புதன்கிழமை அன்று பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. 

Continues below advertisement

மின்தடை நடைபெற உள்ள பகுதிகள் 

அந்த நேரத்தில் காஞ்சிபுரம் நகரில் சில பகுதிகளான வள்ளல் பச்சையப்பன் தெரு, கீரைமண்டபம், ரங்கசாமி குளம் பகுதிகள், காமராஜர் வீதி, மேட்டுத்தெரு, சின்ன காஞ்சிபுரம், பெரியார் நகர், தேனம்பாக்கம், முத்தியால்பேட்டை‌ மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது. 

களக்காட்டூர் பகுதி, திருக்காலிமேடு, சேக்குப்பேட்டை வடக்கு,தெற்கு மற்றும் நடுத்தெரு, எண்ணைக்காரத் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், டோல்கேட், விஷார், மாமல்லன் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது. 

காந்திரோடு, ஐயம்பேட்டை, ஓரிக்கை, ஓரிக்கை தொழிற்பேட்டை, அண்ணா குடியிருப்பு, சதாவரம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சுற்றியுள்ள பகுதிகள், செவிலிமேடு, பாலாறு தலைமை நீரேற்றம், சங்குசா பேட்டை ஆகிய பகுதிகளில் மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது.

மின்தடை மேற்கொள்ளப்பட உள்ள நேரம்:

நாளை 24.09.2025 புதன்கிழமை அன்று காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை மின்தடை ஏற்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே பொதுமக்கள் தங்களுடைய மின் தேவைகளை திட்டமிட்டு கொள்ளுமாறு அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.