காஞ்சிபுரம் மாவட்டத்தில் பழையசீவரம் மற்றும் பிள்ளைப்பாக்கம் ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று (17-05-2025) பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளதால் இன்று மின்தடை ஏற்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது ‌

பழையசீவரம் துணைமின் நிலையம் 

மதூர், அருங்குன்றம், அவளூர். தம்மனுார், கம்பராஜ புரம், சித்தாலப்பாக்கம், வடக்குப் பட்டு, எழிச்சூர், பாலுார், மேலச்சேரி, உள்ளாவூர், பழையசீவரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மின்தடை.

வாலாஜாபாத், கிதிரிப்பேட்டை, புத்தகரம், கீழ்ஒட்டிவாக்கம், தாங்கி, களியனூர், வில்லிவலம், கருக்குப் பேட்டை, அங்கம்பாக்கம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மின்தடை.

கட்டவாக்கம், தேவரியம்பாக்கம், நத்தாநல்லுார், சங்கராபுரம், புனியம்பாக்கம், சிறுபாகல், பூதேரி, பினாயூர், சீத்த எஞ்சேரி, சாத்தனஞ்சேரி, வாரணவாசி, தென்னேரி, தென்னேரி அகரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மின்தடை.

மச்சமேடு, ஊத்துக்காடு, திருமுக்கூடல், ஆனம்பாக் கம், பட்டா, சிறுதாமூர், நெற்குன்றம், நீர்குன்றம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது.

தொள்ளாழி, வெண்குடி, திம்மரா ஜாம்பேட்டை, ஏகனாம்பேட்டை, புதுப்பேட்டை நாயக்கன்பேட்டை, சீயமங்கலம், பூசிவாக்கம் கரும்பாக்கம், காவடிப்பாக்கம், சிறுமயிலுார் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இன்று மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது

மின்தடை மேற்கொள்ளப்படும் நேரம் 

பழையசீவரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை மேற்கொள்ளப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஸ்ரீபெரும்புதூரில் எங்கு மின்தடை ?

திருப்பெரும்புதூர் கோட்டம், ஒரகடம் உப கோட்டம், பிள்ளைப்பாக்கம் துணை மின் நிலையத்தில் மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் மின்தடை அறிவிப்பு.

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் கோட்டம், ஒரகடம் உப கோட்டம், பிள்ளைப்பாக்கம் 110/33-11 கிலோ வோல்ட் துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 17.05.2025 (சனிக்கிழமை) அன்று காலை 09.00 மணி முதல் மாலை 3:00 மணி வரை மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது. 

வெங்காடு, நாவலூர், பிள்ளைப்பாக்கம், TVH Apartment, பிள்ளைப்பாக்கம் சிப்காட் மற்றும் இதன் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என திருப்பெரும்புதூர் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.