நாடு முழுவதும் பரவலாகக் கருப்பு பூஞ்சை பாதிப்பு பதிவானதை அடுத்து அது பெருவாரியாகப் பரவும் (Epidemic) நோயாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பீகாரில் வெள்ளை பூஞ்சை நோய் பாதிப்பு பதிவானது.வெள்ளை பூஞ்சை கருப்பு பூஞ்சையைவிட ஆபத்தானது எனச் சொல்லப்பட்டது. அது கருப்புப் பூஞ்சையை விட நான்கு மடங்கு ஆபத்தானது என்றார்கள் மருத்துவ நிபுணர்கள். நுரையீரல், நகம், தோல், வயிறு,சிறுநீரகம்,வாய் மற்றும் பிறப்புறுப்புகளை இந்தவகைப் பூஞ்சைகள் பாதிக்கும் என்றனர்.குறிப்பாகக் குழந்தைகள் இதனால் அதிகம் பாதிக்க வாய்ப்புள்ளதாகக் கூறினர். இதற்கிடையே தற்போது புதிதாக மஞ்சள் பூஞ்சை நோய் பாதிப்பு உத்திரபிரதேச மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மற்ற இரண்டு பூஞ்சைகளை விடவும் இது ஆபத்தானது எனக் கூறப்படுகிறது.பாதிக்கப்பட்ட நபர் தற்போது காசியாபாத் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Yellow Fungus: ’கருப்பு, வெள்ளை வரிசையில் இப்போ மஞ்சள் பூஞ்சை’ – உத்தர பிரதேசத்தில் கண்டறியப்பட்ட பாதிப்பு
ABP NADU | 24 May 2021 03:44 PM (IST)
பாதிக்கப்பட்ட நபர் தற்போது காசியாபாத் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மஞ்சள் பூஞ்சை
Published at: 24 May 2021 03:43 PM (IST)