கேரள உயர் நீதிமன்றம், 51 வயது நபரின் விவாகரத்து கோரிக்கையை நிராகரித்ததில், "எதையும் எளிதில் தூக்கி எறியும் நுகர்வோர் பயன்பாட்டை" கடுமையாக சாடியுள்ளது. மேலும் இந்த வழக்கு தொடர்பாகச் சில விரிவான முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில் ஒன்று, இளைய தலைமுறையினர் திருமணத்தை தீமையாகப் பார்க்கிறார்கள் என்று கூறியுள்ளது. இப்போதெல்லாம், இளைய தலைமுறையினர் திருமணத்தைத் தவிர்க்கக்கூடிய ஒரு தீமை என்று நினைக்கிறார்கள், எந்தவிதமான பொறுப்புகளும், கடமைகளும் இல்லாமல் சுதந்திரமான வாழ்க்கையை அனுபவிக்க முடியும் என நினைக்கிறார்கள். அவர்கள் 'WIFE' என்ற வார்த்தையை 'Worry Invited For Ever' என்று எப்போதும் நினைக்கிறார்கள்." என்று நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


லைவ்-இன் பார்ட்னர்ஷிப்களின் அதிகரிப்பை சுட்டிக்காட்டியுள்ள நீதிமன்றம் "சமூகத்தின் மனசாட்சி" தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது.


"திருமண உறவில் கொடுமைப்படுத்தியதன்  காரணமாக விவாகரத்து கோரிய நபரின் கோரிக்கையை நீதிபதிகள் ஏ முகமது முஸ்டாக் மற்றும் சோபி தாமஸ் ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் 24 ஆகஸ்ட் 2022 அன்று நிராகரித்தது.




நீதிமன்ற உத்தரவில், "அவருக்கு 2017 முதல் திருமணம் கடந்த தொடர்பு உள்ளது, ஆனால் அவரது மனைவி, அவரை மீண்டும் ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதால், ஒரு இணக்கமான மறு இணைவுக்கான வாய்ப்புகள் என்றென்றும் தடுக்கப்படுவதைக் காட்ட எதுவும் இல்லை என்று கூறியுள்ளது. இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் பிறந்துள்ளனர் என்பதும் உயர்நீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


பெண் குழந்தைகளுடன் வசிக்கும் அவரது மனைவி, தன்னை கணவர் உடல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறிய குற்றச்சாட்டை கணவர் மறுத்ததால், அவரது மனு குடும்ப நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டதை அடுத்து, அவர் உயர்நீதிமன்றத்தில் ஆஜரானார்.
விவாகரத்துச் சட்டம் 1869 கிறிஸ்தவ திருமணங்களின் விண்ணப்பத்தின்படி, மனைவியால் செய்யப்பட்ட எந்தக் கொடுமையையும் கணவனால் நிரூபிக்க முடியவில்லை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
வழக்கு தொடுத்த தம்பதிகள்  ஆலப்புழா பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆனால் 2009ல் திருமணம் செய்துகொண்ட இந்த ஜோடி பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சவுதி அரேபியாவில் வசித்து வருகின்றனர். இதை அடுத்து கணவர் 2018ல் குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.


 


முன்னதாக,


கேரள உயர்நீதிமன்றம் இஸ்லாமிய சமூகத்தினர் தங்கள் வீட்டின் அருகே மசூதி கட்ட கோரி தொடர்ந்த மனுவில் மசூதி கட்ட அனுமதி மறுத்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  வெள்ளிக்கிழமை அன்று இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அமர்வு இஸ்லாமிய சமூகத்தின் உறுப்பினர்களை ஒரு புதிய மசூதி அல்லது பிரார்த்தனை மண்டபத்தை தங்கள் இல்லத்திற்கு அருகில் கட்ட அனுமதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.


உயர் நீதிமன்றம் இதுகுறித்த தனது தீர்ப்பு அறிக்கையில் "கடவுள் எல்லா இடங்களிலும் இருக்கிறார். முஸ்லீம் சமூகம் தங்கள்‘ பிரார்த்தனைகளை ’மசூதியில் நடத்த விரும்பினால், அவர்கள் தங்கள் இல்லத்திற்கு அருகில் ஒரு புதிய பிரார்த்தனை மண்டபத்தை நிர்மாணிப்பதற்கு பதிலாக அருகிலுள்ள மசூதிக்கு செல்லலாம்" எனக் கூறியது.