மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் இன்று காலை 7 மணிக்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளுக்கும், அசாமில் 39 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் தங்களின் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். 


இந்நிலையில், காலை 9 மணி நிலவரப்படி அசாமில் 10.51 சதவீதம், மேற்கு வங்கத்தில் 13.14 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.