பண நோட்டில் எழுதுவதென்பது பலருக்கும் பிடித்தமானது. பலரும் தன் மனதில் உள்ளவைகளை, மனதிறுகு நெருக்காமானவர்களின் பெயர்களை பணத்தில் எழுதி மகிழ்ச்சி அடைவார்கள். அந்தவகையில், சமீபத்தில், ஒரு பெண் தனது காதலனுக்கு 10 ரூபாய் நோட்டில் தனது திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாகவும், தன்னை இதிலிருந்து மீட்கவும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த நோட்டின் படம் தற்போது வைரலாகி, இணையத்தில் பல நகைச்சுவையான கமெண்ட்களை பெற்றுள்ளது.






இந்தியாவில் காதல் திருமணங்கள் இந்த நாட்களில் மிகவும் பொதுவானதாக தோன்றினாலும், நிஜத்தில் அது உண்மையில்லை. அனைவருக்கும் தனது இணையை சுதந்திரமாகத் தேர்ந்தெடுக்கும் உரிமை இருந்தும், பலரும் இதை விரும்பவில்லை. அப்படி, குசும் என்ற பெண் தான் காதலிக்கும் நபரை மணந்து கொள்ள முடியாத இக்கட்டான நிலைக்கு ஆளாகி உள்ளார். இதிலிருந்து தன்னைக் காப்பாற்ற வருமாறு தனது காதலர் விஷாலுக்கு  பண நோட்டில் எழுதி தூது அனுப்பியுள்ளார்.






பத்து ரூபாய் நோட்டில், “விஷால், என் திருமணம் 26 ஏப்ரல் அன்று நிச்சயிக்கப்பட்டுள்ளது. என்னைக் காப்பாற்று. நான் உன்னை காதலிக்கிறேன். உன் குசும்)" என்று எழுதியுள்ளார்.






இந்த பண நோட் கிடைத்த ஒரு ட்விட்டர் பயனர், அதை ஆன்லைனில் பகிர்ந்துள்ளார், விஷால் செய்தியைப் பெறுவார் என்று நம்புகிறார். "ட்விட்டர் நண்பர்களே, உங்கள் சக்தியைக் காட்டுங்கள்... ஏப்ரல் 26 ஆம் தேதிக்கு முன் குசுமின் இந்த செய்தியை விஷாலுக்கு வழங்க வேண்டும். காதலில் இருக்கும் இருவர் ஒற்றுமையாக இருக்க வேண்டும் ” என்று பயனர் எழுதினார். “தயவுசெய்து உங்களுக்குத் தெரிந்த விஷால் அனைவரையும் டேக் செய்யவும் குறிப்பிட்டு ஷேர் செய்துள்ளார்.










இந்த ட்வீட்கள் டிவிட்டரில் வைரல் ஆகி வருகிறது. பலரும் இதை நகைச்சுவையான கருத்துக்களை பதிவிட்டு பகிர்ந்து வருகின்றனர்.