சாலையில் யானையுடன் நின்று கொண்டிருந்த பாகன் மீது இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் மோதியதில் விபத்துக்குள்ளானது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. 






அலறியடித்து ஓடிய யானை:


பாகன் ஒருவன் சாலையில் யானையுடன் நின்றிருந்த நிலையில் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற பெண், பாகன் மீது மோதிவிட்டார். இதைப் பார்த்து யானை பயந்து அலறியடித்து ஓடிவிட்டது. மேலும் அதிர்ஷ்டவசமாக இருசக்கர வாகனம் யானை மீது மோதவில்லை.


இந்திய வனத்துறை ட்விட்டரில் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்றில், யானை ஒன்று சாலையை கடக்க காத்திருந்து ஒரு இரு சக்கர வாகனம் வரும் போது அதன் குறுக்கே ஓடும். இதனால் அந்த வாகன ஓட்டி பயத்தில் தாறுமாறாக ஓட்டிச் செல்வதை வீடியோவில் காண முடியும்.