ராஜஸ்தானில் அரசு ஊழியரை பாஜக எம்.பி. ஒருவர் கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ராஜஸ்தான் மாநிலம் சித்ரோகர் எம்.பி. சந்திர பிரகாஷ் ஜோஷி ஒரு நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், காவல் உயர் அதிகாரிகள் சூழ பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது எதிரே ஐடி கார்டுடன் நிற்கும் ஒரு அரசு ஊழியரை சற்றும் எதிர்பாராத நிலையில் கன்னத்தில் அறைகிறார். அந்த நபர் நிலைகுலைந்து அதிர்ச்சி அடைகிறார்.


ஆனால் சுற்றி நிற்கும் காவலர்களோ, காவல் உயர் அதிகாரிகளோ எவ்வித சலனமும் இல்லாமல் அமைதியாக நிற்கின்றனர். இந்தச் சம்பவம் இணையத்தில் வைரலாகி உள்ளது. 7 விநாடிகளே ஓடும் இந்த வீடியோ அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.






கர்நாடகாவில் ஒரு சம்பவம்..


கர்நாடகாவில் கடந்த மாதம் நிலப்பட்டா தொடர்பாக முறையிட்ட பெண்ணை, கன்னத்தில் பாஜக அமைச்சர் சோமன்னா அறைந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது. கர்நாடகாவின், ஹங்காலா கிராமத்தில் அரசு சார்பில் நிலப்பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், உள்கட்டமைப்பு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சோமன்னா பங்கேற்றார். அப்பொழுது அமைச்சருக்கு அருகில் வந்த பெண் ஒருவர், தனக்கு நிலப்பட்டா வழங்கவில்லை என கோபமுடன் முறையிட்டார். அதனால், ஏற்பட்ட ஆத்திரத்தில் எதிரே நின்ற அந்த பெண்ணின் கன்னத்தில் அமைச்சர் அறைந்தார். செய்வதறியாது திகைத்த அந்த பெண் அடுத்த நொடியே, அமைச்சரின் பாதங்களில் விழுந்து வணங்கினார். 


இதை­ய­டுத்து எதிர்க்­கட்­சி­கள், அமைச்­சர் விளக்­கம் அளிக்க வேண்­டும் என வலி­யு­றுத்­தின. எனி­னும் தொடக்­கத்­தில் அமைச்­சர் வாய் திறக்­க­வில்லை. பின்னர் அவ­ரது அலு­வ­ல­கம் வெளி­யிட்ட காணொ­ளிப் பதிவு ஒன்­றில், அமைச்­ச­ரால் தாக்­கப்­பட்­ட­தா­கக் கூறப்­படும் பெண் தோன்றி, அமைச்­சர் தமக்கு உத­வு­வ­தா­கக் கூறி­னார் என்­றும் தம்மை கன்­னத்­தில் அறை­ய­வில்லை என்­றும் குறிப்­பி­டு­கி­றார். அந்­தக் காணொ­ளி­யில் அவர் தம் குழந்­தை­க­ளு­டன் காணப்­ப­டு­கி­றார். இதற்­கி­டையே, அந்­தப் பெண்­ணி­டம் தாம் தவ­றாக நடந்து கொள்­ள­வில்லை என­வும் யார் மன­மா­வது புண்­பட்­டி­ருந்­தால் அதற்­காக மன்­னிப்பு கோரு­வ­தா­க­வும் அமைச்­சர் தெரி­வித்­துள்­ளார்.


தமிழகத்திலும் நடந்திருக்கிறது:


விருதுநகரில் கடந்த ஜூலை மாதத்தில் பொதுமக்கள் அமைச்சரிடம் தங்களது குறைகளை வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனிடம் மனுக்களாக கொடுக்க வந்தனர். அப்போது மனு கொடுக்க வந்த பெண் ஒருவரை அந்த மனுவால் அவரது தலையில் அறைந்த  அமைச்சர் கே.கே.எஸ்.ஆர்.ஆர்.ராமச்சந்திரன் பின்னர் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டியிடம் உடனடியாக அந்த மனு மீது விசாரணை நடத்தி  நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பட்டுத்தியதோடு சமூக வலைத்தலங்களில் தற்போது வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த வரிசையில் கடைசியாக ராஜஸ்தான் நிகழ்வு இணைந்துள்ளது.