மனிதர்களுக்கு மிகவும் நெருங்கிய தொடர்பு உள்ள விலங்குகளில் ஒன்று குரங்கு. குரங்கு மற்ற விலங்குகளிடமிருந்து சற்று வித்தியாசமானது. குரங்குகள் எப்போதும் சில விஷயங்களை புத்திசாலிதனமாக செய்வது வழக்கம். அப்படி ஒரு குரங்கு ஒன்று செய்யும் சேட்டை ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதில் என்ன ஆச்சரியம் இருக்கு? 


இந்த சம்பவம் தொடர்பாக ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் இருக்கும் வீடியோவின்படி குரங்கு ஒன்று ஒரு மனிதரின் கண்ணாடியை பிடுங்கி வைத்து கொண்டுள்ளது. அதன்பின்னர் அவர் அதை எடுக்க முயற்சி செய்த போது அவரிடம் இருந்து வேறு பொருளை வாங்க முற்படுகிறது. அந்தப் பொருளை தந்தால் தான் இந்தப் பொருளை தருவேன் என்பது போல் அது நடந்து கொண்டுள்ளது. இறுதியில் அந்த மனிதரிடம் இருந்து பொருளை வாங்கி கொண்டு அவருடைய கண்ணாடியை கீழே எரிந்தது. 


 






இந்த வீடியோவை தற்போது வரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்து ரசித்துள்ளனர். அத்துடன் பலரும் அந்த குரங்கின் புத்திசாலிதனத்தை பாராட்டி வருகின்றனர். மேலும் பலரும் அந்த குரங்கின் சேட்டை பார்த்து சிரிக்கும் வகையில் சில பதிவுகளை செய்து வருகின்றனர். 


 






 






 






 






 






 


இவ்வாறு பலரும் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 


மேலும் படிக்க: என்கிட்டயா வம்புக்கு வந்த? : சிங்கத்தை திணறவைத்து ஓடவிடும் நாய்.. வைரல் வீடியோ