உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்கிம்பூரில் உள்ள கேரி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் மின் கம்பத்தில் மேல் ஏறியுள்ளார். அவரின் மனைவி, அவரது பெற்றோரின் வீட்டுக்குச் சென்று திரும்பி வர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மின் கம்பத்தின் மீது மிரட்டல் விடுத்துள்ளார்.




இச்சம்பவத்தை அறிந்த பலரும் மின் கோபுரத்தின் அருகே கூடினர். மேலும் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் ஒலிப்பெருக்கி மூலமாக கீழே இறங்கி வருமாறு பல்வேறு தரப்பினரும் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் அந்த நபர் கீழே இறங்கி வர மறுத்து விட்டார்.


6 மணி நேரத்திற்கு பிறகு இறங்கினார்


பின்னர் 6 மணி நேரம் கழித்து, அவரது மனைவி சம்பவ இடத்திற்கு வந்து கீழே இறங்கி வருமாறு ஒலிப்பெருக்கி மூலம் தெரிவித்தார். அதையடுத்து, அவரின் கணவர் மின் கோபுரத்திலிருந்து கீழே இறங்கி வந்தார். 




Also Read: Unemployment CMIE Data: வேலையில்லா நிலை.. ஹரியானாவுக்கு முதலிடம்.. தமிழ்நாடு எந்த இடத்தில் இருக்கிறது தெரியுமா?


Also Read: IND vs Aus 2nd T20: சிக்சர்கள், பவுண்டரிகள் விளாசிய கேப்டன் ரோகித்... ஆஸியை எளிதாக வீழ்த்திய இந்தியா...


இந்நிலையில், தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.