Just In

உடல், மனம், ஆன்மாவிற்கு சமநிலையை வழங்கும் பதஞ்சலியின் அஷ்டாங்க யோகாவின் சக்தி

“உண்மையாவே அமைதி வேணும்னு 2 வாரத்துல நிரூபிங்க, இல்லைன்னா அவ்ளோதான்“ புதினுக்கு ட்ரம்ப் கெடு

எங்களுக்கு எம்.பி சீட் குடுத்தே ஆகணும்; சொன்ன வார்த்தைய காப்பாத்துங்க - EPS-க்கு பிரேமலதா செக்

Anbumani vs Ramadoss: சந்திக்கு வந்த சண்டை.. ராமதாசே சொன்ன பகீர் குற்றச்சாட்டுகள்! என்ன செய்யப்போகிறார் அன்புமணி?

"என்னுடைய சாதி பத்தியே அப்போதான் தெரிஞ்சிகிட்டேன்" என்ன சொன்னார் துணை ஜனாதிபதி தன்கர்?
Shiva Rajkumar | "எங்க அண்ணன்டா கமல்" கொந்தளித்த நடிகர் சிவராஜ் குமார்! கன்னட வெறியர்களுக்கு பதிலடி
Uttar Pradesh : பெண்களுக்கு நைட் ஷிப்ட் போட்டா நாக் அவுட்தான்.. எச்சரித்த உ.பி அரசு!
பெண்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை பெண்கள் பணியாற்றத் தடை விதிப்பதாக உத்தரபிரதேச அரசு அறிவித்துள்ளது.
Continues below advertisement

யோகி ஆதித்யநாத்
பெண்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை பெண்கள் பணியாற்றத் தடை விதிப்பதாக உத்தரபிரதேச அரசு அறிவித்துள்ளது.
யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசு சனிக்கிழமை (நேற்று) வெளியிட்ட உத்தரவில், மாநிலம் முழுவதும் உள்ள தொழிற்சாலைகளில் பணியிடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை வழங்குவதற்காக மாநிலம் முழுவதும் உள்ள தொழிற்சாலைகளில் எந்த ஒரு பெண் ஊழியர்கள் இரவு ஷிப்ட் செய்யக் கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசு சனிக்கிழமை (நேற்று) வெளியிட்ட உத்தரவில், மாநிலம் முழுவதும் உள்ள தொழிற்சாலைகளில் பணியிடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை வழங்குவதற்காக மாநிலம் முழுவதும் உள்ள தொழிற்சாலைகளில் எந்த ஒரு பெண் ஊழியர்கள் இரவு ஷிப்ட் செய்யக் கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உத்தரபிரதேச அரசு வெளியிட்ட அறிக்கையில், "எந்த ஒரு பெண் ஊழியர்களும் காலை 6 மணிக்கு முன்பும், மாலை 7 மணிக்குப் பிறகும் அவரது எழுத்துப்பூர்வ அனுமதியின்றி பணிபுரியக் கூடாது. மேற்கூறிய நேரங்களில் பணிபுரிந்தால், அதிகாரிகள் இலவச போக்குவரத்து, உணவு மற்றும் போதுமான கண்காணிப்பை வழங்க வேண்டும்" என்று அரசு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண் ஊழியர்கள் காலை 6 மணிக்கு முன்பாகவும், மாலை 7 மணிக்குப் பின்னும் பணி செய்ய மறுத்தால், அவர் வேலையில் இருந்து நீக்கப்படமாட்டார் என்ற முடிவை அறிவிக்குமாறு உ.பி தொழிலாளர் துறை மாநில அரசாணையை வெளியிட்டது.
பெண் ஊழியர்கள் காலை 6 மணிக்கு முன் பணிக்கு அழைக்கப்படமாட்டார்கள் என்றும் இரவு 7 மணிக்கு மேல் வேலைக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் இல்லை என்றும், அவர்களின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
Continues below advertisement
எழுத்துப்பூர்வ சம்மதமின்றி குறிப்பிட்ட நேரத்தில் பெண்கள் பணிபுரியக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இரவில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு இலவச போக்குவரத்து, உணவு வழங்கப்பட வேண்டும் என்றும், அவர்களுக்கு குடிநீர், கழிவறை உள்ளிட்ட வசதிகள் இருப்பது உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.