ரூ.14,850 கோடி.. 296 கிமீ.. பிரதமர் திறந்துவைத்த பண்டேல்கண்ட் விரைவுச்சாலை! முக்கியமான 5 தகவல்கள்!

பிரதமர் நரேந்திர மோடி உத்தரபிரதேசத்தில் பண்டேல்கண்ட் விரைவுச்சாலையை திறந்து வைத்தார்.

Continues below advertisement

பிரதமர் நரேந்திர மோடி உத்தரபிரதேசத்தில் பண்டேல்கண்ட் விரைவுச்சாலையை இன்று திறந்து வைத்துள்ளார்.

Continues below advertisement

 

இதுகுறித்து தெரிந்து கொள்ள வேண்டிய ஐந்து விஷயங்களை கீழே பார்க்கலாம்.


  • இந்த விரைவுச்சாலை பிராந்தியத்தில் இணைப்பு மற்றும் தொழில்துறை வளர்ச்சியை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 14,850 கோடி ரூபாய் செலவில் 296 கிமீக்கு நான்கு வழி விரைவுச் சாலை அமைக்கப்பட்டு உள்ளது.


  • கடந்த 2020ஆம் ஆண்டு, பிப்ரவரி 29 அன்று பிரதமரால் இந்த திட்டத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. அதிவேக நெடுஞ்சாலையின் பணிகள் 28 மாதங்களுக்குள் முடிக்கப்பட்டுள்ளன.


  • உத்தரபிரதேச விரைவுச்சாலைகள் தொழில்துறை மேம்பாட்டு ஆணையத்தின் ஆதரவில் இந்த விரைவுச்சாலை கட்டப்பட்டது. பின்னர் ஆறு வழிச்சாலையாக விரிவாக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


  • பிராந்தியத்தில் இணைப்பை மேம்படுத்துவதுடன், அதிவேக நெடுஞ்சாலையானது பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் ஊக்கத்தை அளிக்க உள்ளது. 

 

  • விரைவுச்சாலைக்கு அடுத்தபடியாக பண்டா மற்றும் ஜலான் மாவட்டங்களில் தொழில்துறை வழித்தடத்தை உருவாக்கும் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன.

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

Continues below advertisement