உத்தரப்பிரதேசத்தில் சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட சம்பவத்தில் ரயிலின் ஓட்டுநர்கள் காயமடைந்தனர். 


உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூர் ரயில் நிலையம் அருகே இன்று அதிகாலை சுல்தான்பூர்-பெனாரஸ் ரயில் பாதையில் இரண்டு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இரண்டு ரயில்களின் ஓட்டுநர்களும் பலத்த காயம் அடைந்தனர். ரயில்கள் நேருக்கு நேர் மோதிய நிலையில் 11 பெட்டிகள் கவிழ்ந்ததால், லக்னோ-வாரணாசி இடையேயான அந்த வழித்தடத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.






மேலும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கவிழ்ந்த ரயில்பெட்டிகளை கிரேன் உதவியுடன் மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.