பீகாரில் மகாகத்பந்தன் கூட்டணியின் முதலமைச்சராக ஐக்கிய ஜனதா தளதலைவர் நிதீஷ் குமார் இன்று பதவியேற்கிறார். ஆர்ஜேடி, காங்கிரஸ் உள்பட 7 கட்சிகளின் ஆதரவுடன் பீகாரில் நிதீஷ் புதிய கூட்டணி ஆட்சியின் பதவியேற்க இருக்கிறார். 






ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் துணை முதலமைச்சராக தேஜஸ்வி யாதவ் பதவியேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் பீகார் முதலமைச்சராக 8 வது முறையாக பதவியேற்று கொள்கிறார் நிதீஷ்குமார். இதுகுறித்து நிதீஷ் குமார் தெரிவிக்கையில், "எங்களுக்கு ஏழு கட்சிகளின் ஆதரவு உள்ளது. ஆதரவு கடிதத்தில் அனைவரும் கையெழுத்திட்டுள்ளனர். மொத்தம் இரண்டு சுயேச்சைகள் உட்பட 164 எம்.எல்.ஏ.க்கள் புதிய அரசுக்கு ஆதரவளிக்க உள்ளனர்.


 நிதீஷ் குமார், ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரும் போது, ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் மற்றும் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி முன்னணி பிரதிநிதிகள் எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை அளித்தனர். 243 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில், ஆர்ஜேடி தற்போது 79 எம்எல்ஏக்களுடன் தனிப் பெரிய கட்சியாக உள்ளது. JD(U) 45 சட்டமன்ற உறுப்பினர்களையும், காங்கிரஸ் 19 மற்றும் CPI(ML) தலைமையிலான இடது முன்னணி 17 சட்டமன்ற உறுப்பினர்களையும் கொண்டுள்ளது.






புதிய முதலமைச்சராக பதவியேற்கவுள்ள நிதீஷ் குமார் தனது கட்சி எம்.எல்.ஏக்களின் கூட்டத்தை கூட்டிய சில மணி நேரங்களிலேயே பீகார் அரசியலில் திருப்பம் ஏற்பட்டது. “ பாஜகவுடனான கூட்டணி முடிந்து விட்டது காவி கூட்டணி மரியாதை கொடுக்கவில்லை, சதி செய்கிறது என்றும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. 


ராஜ் பவனுக்கு வெளியே நிதீஷ் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேற ஜேடி(யு) கட்சியின் அனைத்து எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஒருமித்த கருத்துடன் உள்ளனர் என்றும் தெரிவித்தனர். 


நேற்று முந்தினம், தனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகக் கூறி, நிதி ஆயோக் கூட்டத்தில் நிதிஷ் கலந்து கொள்ளவில்லை. ஆனால் பாட்னாவில் இரண்டு அரசு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டார்.


இந்த அரசியல் நெருக்கடியில் முக்கிய பங்கு வகிக்கும் ஆர்.சி.பி. சிங், சனிக்கிழமை மாலை நிதிஷ் குமாரின் கட்சியை விட்டு வெளியேறினார். மாநிலங்களவை உறுப்பினராகவும் மத்திய அமைச்சராகவும் அவர் பொறுப்பு வகித்து வந்தார். ஆனால், அவரை அமித் ஷாவின் பினாமியாகவே நிதிஷ் குமார் பார்த்து வந்தார். 


ஊழல் செய்ததாக சிங் மீது அவரது சொந்த கட்சியே விமர்சனம் மேற்கொண்டிருந்தது. சமீபத்தில்தான், அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை மீண்டும் வழங்க ஐக்கிய ஜனதா தளம் மறுத்திருந்தது. இதன் காரணமாக, மத்திய அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண