மாநிலங்களுக்கான வரிப் பகிர்வாக ரூ. 1,78,173  கோடியை மத்திய அரசு இன்று விடுவித்துள்ளது. ரூ. 89,086.50 கோடி என்னும் வழக்கமான மாதாந்திர வரிப் பகிர்வுக்குப் பதிலாக, கூடுதல் வரிப்பகிர்வு வழங்கப்பட்டுள்ளது. இதில்,

  2024 அக்டோபர் மாதத்தில் விடுவிக்கப்பட வேண்டிய வழக்கமான முன்கூட்டிய தவணையும் அடங்கியுள்ளது.

தமிழ்நாட்டுக்கு எவ்வளவு நிதி வழங்கப்பட்டுள்ளது?

வரவிருக்கும் பண்டிகை காலத்தைக் கருத்தில் கொண்டும், மாநிலங்கள் மூலதனச் செலவினங்களை விரைவுபடுத்தவும், அவற்றின் வளர்ச்சி / நலத்திட்டங்களின் செலவினங்களுக்கு நிதியளிக்கவும் ஏற்றவகையில் இந்த வரிப்பகிர்வு விடுவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக பாஜக ஆளும் உத்தரப் பிரதேசத்திற்கு 31,962 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக, பாஜக கூட்டணி ஆட்சி நடக்கும் பீகார் மாநிலத்திற்கு 17,921 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக, சின்ன மாநிலமான கோவாவுக்கு 688 கோடி ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது. இங்கும் பாஜகதான் ஆட்சி செய்கிறது.

தமிழ்நாட்டுக்கு 7,268 கோடி ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது. விடுவிக்கப்பட்ட தொகையின் மாநில வாரியான விவரம் கீழே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது: 2024 அக்டோபர்  மாதத்திற்கான மத்திய வரிகள் மற்றும் தீர்வைகளின் மாநில வாரியான வரிப்பகிர்வு 

வரிசை
எண்

மாநிலத்தின் பெயர்

மொத்தம்
(கோடி ரூபாயில்)

1

ஆந்திரப் பிரதேசம்

7,211

2

அருணாச்சலப் பிரதேசம்

3,131

3

அசாம்

5,573

4

பீகார்

17,921

5

சத்தீஸ்கர்

6,070

6

கோவா

688

7

குஜராத்

6,197

8

ஹரியானா

1,947

9

இமாச்சலப் பிரதேசம்

1,479

10

ஜார்க்கண்ட்

5,892

11

கர்நாடகா

6,498

12

கேரளா

3,430

13

மத்தியப் பிரதேசம்

13,987

14

மகாராஷ்டிரா

11,255

15

மணிப்பூர்

1,276

16

மேகாலயா

1,367

17

மிசோரம்

891

18

நாகாலாந்து

1,014

19

ஒடிசா

8,068

20

பஞ்சாப்

3,220

21

ராஜஸ்தான்

10,737

22

சிக்கிம்

691

23

தமிழ்நாடு

7,268

24

தெலங்கானா

3,745

25

திரிபுரா

1,261

26

உத்தரப் பிரதேசம்

31,962

27

உத்தராகண்ட்

1,992

28

மேற்கு வங்கம்

13,404

இதையும் படிக்க: Maya Tata: ரத்தன் டாடாவின் பல்லாயிரம் கோடி ரூபாய் சாம்ராஜ்ஜியம்; டாடா குழுமத்தின் வாரிசு இவரா? யார் இந்த மாயா டாடா?