மகாராஷ்டிராவில் சீரியல் நடிகை துனிஷா ஷர்மா (20) தொலைக்காட்சி தொடர் ஒன்றின் படப்பிடிப்பு தளத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அம்மாநில போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். மேக்கப் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 






அலி பாபா தஸ்கான் - இ- காபூல் என்ற தொலைக்காட்சி தொடரின் முன்னணி நடிகையாக துனிஷா இருந்துள்ளார்.  கடந்த சில நாட்களாக படப்பிடிப்பு தளத்தில் துனிஷா டென்ஷனாக இருந்ததாக கூறப்படுகிறது. ஐந்து மணி நேரத்திற்கு முன்பு, துனிஷா தனது மேக்கப்பை செட்டில் இருந்து செய்து கொள்ளும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். 


நடிகை துனிஷா வாழ்க்கை:


நடிகை துனிஷா ஷர்மா, பிரபல தொலைக்காட்சித் தொடர்களான 'சக்ரவர்தின் அசோக சாம்ராட்', 'பாரத் கா வீர் புத்ரா - மஹாராணா பிரதாப்' மற்றும் 'அலி பாபா தஸ்தான்-இ-காபூல்' போன்றவற்றில் நடித்ததால் பிரபலமடைந்தவர். 






தற்கொலை செய்து கொள்வதற்கு முன், துனிஷா தனது புகைப்படத்தை சமூக ஊடகங்களில் செட்டில் இருந்து பகிர்ந்துகொண்டார், "தங்கள் ஆர்வத்தால் உந்தப்படுபவர்கள் தடுக்க முடியாது" என்று எழுதினார்.


'ஃபிதூர்' மற்றும் 'பார் பார் தேக்கோ' ஆகிய இரண்டு படங்களிலும் இளம் கத்ரீனா கைஃப் கதாபாத்திரத்தில் துனிஷா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.