• தன் மூச்சு இருக்கும் வரை தானே பாமகவின் தலைவர் என்றும், தான் நியமித்தவர்களே நிரந்தரமான நிர்வாகிகள் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
  • போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணாவின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தியுள்ளனர். இரைப்பை அலர்ஜியால் பாதிக்கப்பட்டுள்ளதாக வாக்குமூலம் அளித்த நிலையில், ஆய்வுக்காக மருந்துகளை எடுத்துச் சென்றனர்.
  • நாகை மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மீன்பிடி வலைகள், தளவாடப் பொருட்கள், பிடித்த மீன்களை பறித்துச் சென்று அட்டூழியம்.
  • நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு 24 மணி நேரத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
  • தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 32,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. குளிப்பதற்கும், பரிசல் சவாரி செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • மதுபோதையில் நடனமாடி, பெண் பக்தர்கள் மீது விபூதி அடித்து விளையாடி வீடியோ வெளியிட்ட விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் தற்காலிக அர்ச்சகர்கள் 3 பேர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
  • ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஜூலை 11-ம் தேதி சட்ட வல்லுநர்களுடன் நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆலோசனை நடத்துகிறது. திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்து அலோசனை நடக்க உள்ளதாக தகவல்.
  • இந்தியாவின் அடுத்த தலைமுறை போருக்கு ஏகே-203 என்ற துப்பாக்கியுடன் கூடிய ட்ரோன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு பயன்படுத்த திட்டம்.
  • அமெரிக்காவின் தாக்குதலில் அணுசக்தி நிலையங்கள் சேதமாகவில்லை என கூறிவந்த ஈரான், தற்போது அதை மாற்றி, அணுசக்தி மையங்களில் மோசமான சேதம் ஏற்பட்டுள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளது.
  • சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இன்று மாலை 4.30 மணிக்கு இணைகிறது டிராகன் விண்கலம். சுபான்சு சுக்லா உள்ளிட்ட ஆக்ஸியம்-4 குழுவை வரவேற்க காத்திருக்கும் விண்வெளி வீரர்கள்.