• தமிழகத்தில் நேற்று 7 மாவட்டங்களில் வெயில் சதமடித்துள்ளது. கோடை காலம் தொடங்கும் முன்பே இப்படி இருப்பதால் மக்கள் அவதியுற்றுள்ளனர். 
  • தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை முடிவடைகிறது. ஒரே நாளில் அதிக வேட்பாளர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 
  • மத்திய அமைச்சர் அமித்ஷா, ராகுல் காந்தி இருவரும் ஏப்ரல் 6ம் தேதி சென்னை வருகின்றனர். மத்திய அமைச்சர் அமித்ஷா புதுச்சேரி செல்லும் நிலையில் ராகுல்காந்தி காங்கிரஸ் நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகிறார்.
  • மகளிர் உரிமைத்தொகையை தடுக்க பாஜக, அதிமுக முயன்றது. தமிழகத்திற்கான கல்வி நிதியை கூட மத்திய பாஜக அரசு வழங்கவில்லை. டெல்லி அணியை வீழ்த்தி, தமிழ்நாடு அணியை வெற்றி பெற செய்ய வேண்டும் என முதுகுளத்தூரில் நடந்த பரப்புரையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
  • சென்று வந்த அனைத்து தொகுதியிலும் திராவிட மாடல் 2.0 ஆட்சிக்கு மக்கள் டபுள் ஓகே சொல்லிவிட்டனர். விருதுநகரில் போட்டியிடும் தேமுதிகவின் விஜய பிரபாகரனுக்கு முரசு சின்னத்தில் மக்கள் வாக்களிக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
  • கடன் வாங்குவதில் தான் தமிழகம் முதல் மாநிலமாக உள்ளது.  திருவண்ணாமலை தென்பெண்ணையாற்று பாலம் தரமில்லாமல் கட்டப்பட்டது குறித்து அதிமுக ஆட்சி அமைந்த பின் விசாரணை நடத்தப்படும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
  • அண்ணாமலை என்னிடம் பேசிய போது நான் தேர்தலில் போட்டியிடவில்லை. என்டிஏ வேட்பாளர்களுக்கு தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்வேன் என கூறியதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 
  • இருமொழிக் கொள்கை கொண்ட தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம் என கூறி பிரச்சாரம் செய்ய தைரியம் இருக்கிறதா?பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.
  • தமிழகத்தில் டபுள் எஞ்சின் அரசை கொண்டுவர வேண்டும். தமிழகத்திற்கு ஜிஎஸ்டி நிதியாக மத்திய அரசு ரூ.80,000 கோடி வழங்கியுள்ளது என தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
  • மாநில அரசின் மெத்தனத்தால் சபரிமலை ரயில் திட்டம் கிடப்பில் உள்ளது. சபரிமலைக்கான பயணத்தை இது எளிதாக்கும். பாஜக ஆட்சிக்கு வந்ததும் தடைகள் அனைத்தும் தகர்க்கப்படும். இது மோடியின் கேரண்டி என பிரதமர் மோடி வாக்குறுதி அளித்துள்ளார்.
  • ஐபிஎல் 2026 போட்டியில் இன்று நடக்கும் ஆட்டத்தில் ஹைதராபாத் - லக்னோ, பெங்களூரு - சென்னை ஆகிய அணிகள் மோதுகின்றது. 
  • இந்தியா முழுவதும் இயேசுபெருமான் உயிர்த்தெழுந்த நாள் ஈஸ்டர் சன்டேவாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் திரளானோர் பங்கேற்றனர்.