தேர்தல் முடிவுகள்:
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
டெல்லி சட்டப்பேரவை தேர்தல்:
புது டெல்லி தொகுதியில் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், கல்காஜி தொகுதியில் முதலமைச்சர் அதிஷி, ஜங்புரா தொகுதியில் மணீஸ் சிசோடியா ஆகியோர் பின்னடைவு.
லாரி விபத்து:
அரக்கோணத்திலிருந்து திருப்பத்தூர் நோக்கி சிமெண்ட் மூட்டைகளுடன் சென்ற லாரி, ஆம்பூர் அருகே 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் பெருமாள் உயிரிழப்பு.
திருமா பேட்டி:
"டெல்லியில் பாஜக முன்னிலை வகிப்பது அதிர்ச்சியளிக்கிறது.. நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமல்லாமல் சட்டமன்ற தேர்தலிலும் இந்தியா கூட்டணி கவனம் செலுத்த வேண்டும்" -மதுரை விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிதியுதவி:
காட்பாடி அருகே ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெண்ணை தெற்கு ரயில்வே சென்னை கோட்ட அதிகாரிகள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, அவருக்கு தேவையான உதவிகள் செய்துதரும்படி உத்தரவு! ரயில்வே கருணை தொகை ₹50,000ஐ பெண்ணின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.
நாதகவை முந்திய நோட்டா!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தபால் வாக்குகளில் நாம் தமிழர் கட்சியை முந்தியது நோட்டா! நோட்டாவுக்கு 18 வாக்குகளும், நாதகவுக்கு 13 வாக்குகளும் கிடைத்துள்ளது.
எம்புரான் ரிலீஸ் தேதி:
பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன் லால், டொவினோ தாமஸ் உள்ளிட்டோர் நடிக்கும் ‘எம்புரான்’ படத்தின் கதாபாத்திரங்களை நாளை முதல் அறிமுகப்படுத்தவுள்ளதாக படக்குழு அறிவிப்பு. இந்த திரைப்படம் வருகிற மார்ச் 27ம் தேதி வெளியாகவுள்ளது.
காங்கிரஸ் ஹாட்ரிக் ”0”
டெல்லி சட்டசபை தேர்தலில் தொடர்ந்து 3ஆவது முறையாக ஒரு இடங்களில் கூட வெற்றி பெற முடியாத நிலையில் காங்கிரஸ். டெல்லியில் 1998 முதல் 2013 வரை 3 தேர்தல்களில் வென்று ஆட்சி செய்தது காங்கிரஸ்2013ல் ஆட்சியை இழந்த காங்கிரஸ் 3 தேர்தல்களில் ஒரு தொகுதிகளில் கூட வெற்றிபெறவில்லை.
சுத்தியால் அடித்துக் கொலை
சென்னை மணலி புது நகரில் 4 நாட்கள் வேலைக்கு வராததை கண்டித்ததால் மேலாளரை சுத்தியால் அடித்து கொலை செய்த இளைஞர்கள்.கண்டெய்னர் பெட்டக மேலாளரான சாய் பிரசாதைதுபோதையில் சுத்தியால் தாக்கிவிட்டு 2 இளைஞர்கள் தப்பி ஓடியுள்ளனர். மணலி புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.
நாய்கடி- தொடர் கண்காணிப்பு:
சிறுவர்களை கடித்த தெரு நாயை பிடிக்கும் நடவடிக்கையில் மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது. தெரு நாயை பிடித்த பின் இனக்கட்டுபாட்டு மையத்தில் கால்நடை மருத்துவரின் கண்காணிப்பில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்படும்.
சென்னையில் நாய்கள் அதிகம் உள்ள பகுதிகளில் தொடர்ந்து நாய்கள் பிடிக்கும் பணி நடைபெற்று வருகிறது" -சென்னை வேளச்சேரியில் சிறுவர்களை தெரு நாய் கடித்த சம்பவத்திற்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம்.